Advertisement
Advertisement

Sapna gill

Police informs Court that allegation of Molestation levelled by Sapna Gill on Prithvi Shaw are false
Image Source: Google

பிரித்வி ஷா எந்த தவறும் செய்யவில்லை - காவல்துறை விளக்கம்!

By Bharathi Kannan June 27, 2023 • 13:27 PM View: 354

இந்திய கிரிக்கெட் அணி வீரர் பிரித்வி ஷா ஐபிஎல் தொடருக்கு முன்னதாக கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி இரவு மும்பையிலுள்ள சாண்டகிரூஸ் ஹோட்டலில் நண்பர்களுடன் சாப்பிட்டுவிட்டு வெளியில் வந்தார். அப்போது, நடிகை ஸ்வப்னா கில், பிரித்வி ஷா உடன் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அதற்கு பிரித்வி ஷா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஸ்வப்னா கில், பிரித்வி ஷாவின் கார் கண்ணாடியை உடைத்துள்ளார். இதில் பிரித்வி ஷாவும் தாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பிரித்வி ஷா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, ஸ்வப்னா கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு ஜாமீனில் வெளியில் வந்த ஸ்வப்னா கில், பிரித்வி ஷா மீது பாலியல் புகார் அளித்தார்.

Related Cricket News on Sapna gill