Shreyas iyer
வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள ஸ்ரேயாஸுக்கு சிக்கல் உள்ளது - வாசிம் ஜாஃபர்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் 27 பந்துகளில் 36 ரன்கள் விளாசி இருந்தார். தற்போது சீனியர்கள் இல்லாத நிலையில், நடுவரிசை ஸ்ரேயாஸ் ஐயரும், ரிஷப் பண்டையும் நம்பியே உள்ளது.
முதல் டி20 போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் விட்ட கேட்ச் தான், ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் சற்று சிரமப்படுவதாக வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.