Shreyas iyer
இந்திய அணியை வழி நடத்துவது ஒரு ஸ்பெஷலான உணர்வு - ஹர்திக் பாண்டியா
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகளின் முடிவில் மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி முன்னிலை வகித்திருந்த இந்திய அணியானது நேற்று நடைபெற்ற ஐந்தாவது டி20 போட்டியிலும் வெற்றி பெற்று இந்த தொடரை (4-1) நான்குக்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டதால் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி களமிறங்கிய விளையாடியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை குவிக்கவே 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.