Advertisement
Advertisement

Stop clock rule

‘ஸ்டாப் கிளாக்’ விதியை கட்டாயமாக்கியது ஐசிசி!
Image Source: Google

‘ஸ்டாப் கிளாக்’ விதியை கட்டாயமாக்கியது ஐசிசி!

By Bharathi Kannan March 15, 2024 • 19:45 PM View: 66

கடந்தாண்டு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை ஐசிசி மற்றும் பிசிசிஐ இணைந்து வெற்றிகரமாக நடத்தி முடித்தது. அதிலும் உலகக்கோப்பை வரலாற்றிலேயே அதிக ரசிகர்கள் பார்த்த தொடராகவும் இது அமைந்தது. இதனை தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளை கூடுதல் சுவாரஸ்யமாக்க ஐசிசி முடிவு செய்தது. அதற்காக புதிய விதிகளை கொண்டு வர ஐசிசி முடிவு செய்திருந்தது.

அதன்படி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் பந்துவீச்சாளர் ஒருவர் ஒரு ஓவருக்கும் அடுத்த ஓவருக்கும் இடையே 60 விநாடிகளுக்கு மேலாக 3 முறை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும் என ஐசிசி புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியது. மேலும் இந்த விதியை டிசம்பர் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை சோதனை முறையில் அமல்படுத்த ஐசிசி செயற்குழு கூட்டத்தில்முடிவு எடுக்கப்பட்டது. 

Related Cricket News on Stop clock rule