பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நாளை (மார்ச் 9) நடைபெறவுள்ளது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

Advertisement

இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியைச் சேர்ந்த நட்சத்திர வீரர் ஒருவர் ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவும் பட்சத்தில் இந்திய அணியின் நட்சத்திர பேட்டரும், அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Advertisement

ஒருவேளை அவர் ஓய்வை அறிவிக்கவில்லை என்றாலும், சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு பிறகு இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா விலகுவது உறுதி என்று கூறப்படுகிறது. ஏனென்றால், 2027 உலகக் கோப்பைக்கு புதிய கேப்டனை தயார் செய்ய இந்திய அணி விரும்புகிறது. இந்நிலையில் அவருக்கு பதிலாக இந்திய அணியின் அடுத்த கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

ஷுப்மன் கில்

இந்திய அணியின் அடுத்த கேப்டனுக்கான பரிந்துரை பட்டியலில் முதலில் இருப்பவர் ஷுப்மன் கில். 25 வயதான இந்த இளம் பேட்ஸ்மேன் தற்போது ஒருநாள் போட்டியின் துணை கேப்டனாகவும் உள்ளார். இது மட்டுமின்றி, கில் 5 டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார், அதில் 4 போட்டிகளில் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. இதுதவிர ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் போன்ற சாம்பியன் அணிக்கும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இதுதவிர்த்து இந்தியாவுக்காக மூன்று வடிவங்ளிலும் சேர்த்து அவர் 100 க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இதன் காரணமாக ரோஹித் சர்மாவுக்கு பிறகு இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

ஹர்திக் பாண்டியா

Advertisement

இந்த பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் இந்திய அணியின் அடுத்த கேப்டனான நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இந்திய அணியின் நம்பர் ஆல்ரவுண்டராக இருக்கும் ஹர்திக் பாண்டியான், 3 ஒருநாள் மற்றும் 16 டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். மேற்கொண்டு அவர் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் ஐபிஎல் சீசனிலேயே சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு தற்போது அவர் ஐபிஎல்லில் ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியையும் வழிநடத்துகிறார். மேலும் இந்திய அணிக்காக 200 க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், அடுத்த கேப்டன் பதவிக்கான தேர்விலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேஎல் ராகுல்

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இந்திய அணியின் அடுத்த கேப்டனுக்கான பட்டியலில் கேஎல் ராகுலின் பெயர் இடம் பெற்றிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களில் கேஎல் ராகுலும் ஒருவர். தற்போது 32 வயதாகும் கேஎல் ராகுல் இந்திய அணிக்காக மூன்று வடிவங்களிலும் சேர்த்து 200-க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். மேற்கொண்டு ஒரு டி20, 12 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாகவும் கேஎல் ராகுல் செயல்பட்டுள்ளதுடன், ஐபிஎல் தொடரிலும் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உள்ளிட்ட அணிகளின் கேப்டனாவும் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய அணியின் வருங்கால ஒருநாள் கேப்டனுக்கான போட்டியில் அவரும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News