ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் நான்கு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் ஒரு போட்டியிலும் டிராவிலும் முடிவடைந்துள்ளது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்தது.

Advertisement

இதையடுத்து ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த  இந்திய அணியில் ரிஷப் பந்த் 40 ரன்களையும், , ரவீந்திர ஜடேஜா 26, ஜஸ்பிரித் பும்ரா 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, இந்திய அணி 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்காட் போலனட் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Advertisement

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரர் பியூ வெப்ஸ்டர் அரைசதம் கடந்து அசத்தினார். மேற்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெப்ஸ்டர் 57 ரன்களையும், அவரைத் தவிர்த்து ஸ்டீவ் ஸ்மித் 33 ரன்களையும், சாம் கொன்ஸ்டாஸ் 23 ரன்களையும் சேர்த்த நிலையில் மற்ற வீரர்கள் ரன்களைச் சேர்க்க தவறினர். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 51 ஓவர்களை மட்டுமே விளையாடி 181 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் மற்றும் பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், நிதிஷ் ரெட்டி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து 4 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் மீண்டும் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறினர். அதன்படி யஷஸ்வி ஜெய்ஸ்வால் 22 ரன்னிலும், கேஎல் ராகுல் 13 ரன்னிலும், ஷுப்மன் கில் 13 ரன்னிலும், விராட் கோலி 6 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடியதுடன் 29 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின், 33 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 61 ரன்களை எடுத்த நிலையில் ரிஷப் பந்தும் தனது விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ரவீந்திர ஜடேஜா 13 ரன்களை சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து வாஷிங்டன் சுந்தரும் 12 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதனைத்தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணியானது இரண்டாவது இன்னிங்ஸில் 39.5 ஓவர்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்களில் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்காட் போலண்ட் 6 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு 162 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு சாம் கொன்ஸ்டாஸ் அதிரடியான தொடக்கத்தை வழங்கினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கொன்ஸ்டாஸ் 22 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னே 2 ரன்களுக்கும், நட்சத்திர் வீரர் ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்களுக்கும் என அடுத்தடுத்து பிரஷித் கிருஷ்ணா பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 58 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

Advertisement

பின்னர் ஜோடி சேர்ந்த உஸ்மான் கவாஜா மற்றும் டிராவிஸ் ஹெட் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த உஸ்மான் கவாஜா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 41 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின்  டிராவிஸ் ஹெட்டுடன் இணைந்த அறிமுக வீரர் பியூ வெப்ஸ்டரும் பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்த நிலையில், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். 

இறுதியில் டிராவிஸ் ஹெட் 4 பவுண்டரிகளுடன் 34 ரன்களையும், அறிமுக வீரர் பியூ வெப்ஸ்டர் 6 பவுண்டரிகளுடன் 39 ரன்களையும் சேர்த்து ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணியானது 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியதுடன், 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு எதிராக இந்த தொடரை கைப்பற்றியும் அசத்தியுள்ளது. இதுதவிர்த்து நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கும் ஆஸ்திரேலிய அணி முன்னாறி சாதித்துள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதனால் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 71 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. இதில் உஸ்மான் கவாஜா 19 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் பிரஷித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதனையடுத்து 91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News