இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஃப்கானிஸ்தன் அணி ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியானது இன்று தொடங்கியது. கொழும்புவிலூள்ள சிங்கள விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி முதல்நாள் ஆட்டநேர முடிவுக்கு முன்னதாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ரஹ்மத் ஷா 91 ரன்களைச் சேர்த்தார். இலங்கை அணி தரப்பில் விஸ்வா ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், அசிதா ஃபெர்னாண்டோ, பிரபாத் ஜெயசூர்யா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Advertisement

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணிக்கு நிஷன் மதுஷ்கா - திமுத் கருணரத்னே இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்களைச் சேர்த்தனர். இதில் நிஷன் மதுஷ்கா 36 ரன்களுடனும், திமுத் கருணரத்னே 42 ரன்களுடன் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடந்தனர். 

இதில் நிஷம் மதுஷ்கா 37 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய குசால் மெண்டிஸ் 10 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதற்கிடையில் அரைசதம் கடந்திருந்த திமுத் கருணரத்னே 77 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஏஞ்சலோ மேத்யூஸ் - தினேஷ் சண்டிமல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் ஏஞ்சலோ மேத்யூஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 16ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்த, தினேஷ் சண்டிமல் தனது 15ஆவது டெஸ்ட் சதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் 10 பவுண்டரி, ஒரு சிக்சர் என 107 ரன்கள் எடுத்த நிலையில் சண்டிமால் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் தனஞ்செயா டி சில்வா ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தர். அவர்களைத் தொடர்ந்து 14 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 141 ரன்கள் எடுத்திருந்த ஏஞ்சலோ மேத்யூஸும் தனது விக்கெட்டை இழந்தார். 

இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 410 ரன்களை எடுத்துள்ளது. இதில் சதீரா சமரவிக்ரமா 21 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் நவீத் ஸத்ரான், கைஸ் அஹ்மத் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளன. இதையடுத்து 212 ரன்கள் முன்னிலையுடன் இலங்கை அணி நாளை 3ஆம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News