ஐபிஎல் 2024: தங்கள் அணியுடன் இணைந்து பயிற்சியை தொடங்கிய விராட் கோலி, ரோஹித் சர்மா!

Updated: Mon, Mar 18 2024 22:44 IST
ஐபிஎல் 2024: தங்கள் அணியுடன் இணைந்து பயிற்சியை தொடங்கிய விராட் கோலி, ரோஹித் சர்மா! (Image Source: Google)

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் திருவிழாவின் 17ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்பும், ஆவலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட அனைத்து அணிகளும் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு அணியில் உள்ள வீரர்களும் தங்களது பயிற்சி முகாமில் இணைந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக அணியுடன் இணைந்துள்ளார். 

 

முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி விலகினார். அதன்பின் கடந்த பிப்ரவரி மாதம் விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதன் காரணமாக தான் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலிருந்து விலகியதாக கூறப்பட்டது. இதையடுத்து சில தினங்களுக்கு முன் லண்டனில் இருந்து இந்தியா திரும்பிய விராட் கோலி இன்று ஆர்சிபி அணியுடன் இணைந்து தனது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். 

 

 

இதே போல இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் இன்றைய தினம் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா காயத்தை சந்தித்துள்ளதாக கூறப்படும் நிலையில், ஐபிஎல் தொடரில் முதல் ஒரு சில போட்டிகளிலும் விளையாடமாட்டர் என தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் தங்களது ஐபிஎல் அணியுடன் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை