இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஜூன் மாதம் 25ஆம் தேதி தொடங்குகிறது. மேலும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் உலகின் டாப் 2 அணிகள் மோதுவதால் வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பு இருநாட்டு ரசிகர்களிடமும் அதிகரித்துள்ளது.

Advertisement

குறிப்பாக பென் ஸ்டோக்ஸ் புதிய கேப்டனாக பொறுப்பேற்றது முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடி வரும் இங்கிலாந்து தொடர்ச்சியாக எதிரணிகளை தோற்கடித்து வெற்றி கண்டு வருகிறது. எனவே அந்த அதிரடியான அணுகுமுறையை பயன்படுத்தி 2012இல் வென்றதைப் போல இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் 12 வருடங்கள் கழித்து தோற்கடித்து சாதனை படைக்கும் முனைப்புடன் இங்கிலாந்து களமிறங்க உள்ளது.

Advertisement

மறுபுறம் அலெஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்திடம் கடைசியாக 2012இல் தோற்ற இந்தியா அதன் பின் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு தொடரில் கூட தோற்காமல் வெற்றி நடை போட்டு வருகிறது. எனவே இம்முறையும் இங்கிலாந்தை தோற்கடித்து இந்தியா தங்களுடைய வெற்றி நடையை தொடரும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் இந்த தொடரில் விராட் கோலியிடம் இங்கிலாந்து அணியினர் வாய் கொடுத்து வம்பிழுக்காமல் விளையாட வேண்டும் என முன்னாள் வீரர் கிரேம் ஸ்வான் எச்சரித்துள்ளார். ஏனெனில் 2012இல் தங்கள் பந்துவீச்சாளர் ஸ்டீவன் ஃபின் தேவையில்லால உரச, இளம் வீரராக இருந்த போதே விராட் கோலி அவரை பந்தாடியதாகவும் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய ஸ்வான், “விராட் கோலியிடம் எதுவும் சொல்லாதீர்கள் என்று ஏற்கனவே எங்களிடம் சொல்லப்பட்டிருந்தது. ஏனெனில் களத்தில் போட்டி ஏற்படும் போது அதை அவர் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்கொண்டு எந்த இலக்கையும் எளிதாக சேஸிங் செய்வதை விரும்புகிறார். அந்த காலகட்டத்தில் அவர் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் என்ன செய்வார் என்பது எங்களுக்கு தெரிந்திருந்தது. ஆனால் அந்த சமயத்தில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் எதுவும் சாதிக்காதவராகவே இருந்தார்.

அந்தத் தொடரில் அவரிடம் ஸ்டீவன் ஃபின் சில கவர் டிரைவ் பவுண்டரிகளை கொடுத்தார். அதனால் பதற்றமடைந்து தன்னுடைய கதையை மறந்த ஸ்டீவன் அவரிடம் மோதுவதற்காக சென்றார். ஆனால் அதன் பின்பு தான் அவர் தன்னுடைய தவறை உணர்ந்தார். ஏனெனில் அதன் காரணமாக விராட் கோலி சிங்கத்தை போல் கர்ஜித்து ஃபின்னுக்கு எதிராக இரட்டை ரன்களை எடுத்து அனைத்து புறங்களிலும் அடித்து நொறுக்கினார்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News