அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப்படைத்து. இதனையடுத்து இந்திய அணியின் மூத்த பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தனர். 

Advertisement

இப்படிப்பட்ட நிலையில் ரோஹித், விராட் ஆகியோருக்குப் பதிலாக இந்த ஃபார்மட்டில் யார் களமிறங்குவார்கள் என்பதுதான் கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் இருக்கும் பெரிய கேள்வியாக உள்ளது. அந்தவகையில் ரோஹித்தின் இடத்தை யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா அல்லது ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோர் நிரப்ப தயாராக உள்ளனர். ஆனால் அதேசமயம் விராட் கோலியின் இடத்தை நிரப்ப சரியன வீரரை பிசிசிஐ தேடி வருகிறது. இந்நிலையில் விரட் கோலி விட்டுச்சென்ற இடத்தை இளம் வீரர் ரியான் பராக் நிரப்புவார் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். 

Advertisement

இதுகுறித்து பேசிய அவர், “ரோஹித் சர்மாவின் இடத்தை யஷஸ்வி ஜெய்ஸ்வாலால் நிரப்ப முடியும். அவர் உண்மையிலேயே நல்ல வீரர். தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மாவின் வெற்றிடத்தை அவரால் நிரப்ப முடியும் என்று நினைக்கிறேன். வெளிப்படையாக ரோஹித் சர்மா ஆனது ஒரு வருட செயல்முறை அல்ல, ரோஹித் ரோஹித் சர்மாவாக மாறுவது நீண்டகால செயல்முறையாக இருந்தது. அதேபோல் விரட் கோலியின் இடத்தை நிரப்புவ்தும் எளிதல்ல. இந்த இரண்டையும் மாற்றுவது பற்றி நீங்கள் பேசினால், அது எளிதான காரியம் அல்ல, ஆனால் இந்தியாவில் அத்தகைய திறமைகள் நம்மிடம் இருப்பதாக நான் நம்புகிறேன்.

யஷஸ்வி அத்தகைய ஒரு வீரர், நாம் மிடில் ஆர்டரைப் பற்றி பேசினால், ரியான் பராக் ஒரு சிறந்த வீரர். ரியான் பராக் இந்தியாவின் எதிர்கால நட்சத்திரம். வருங்காலத்தில் இந்தியாவுக்கான போட்டிகளை வென்று கொடுக்கும் திறன் ரியான் பராக்கிடம் உள்ளது. ஐபிஎல்லில் நிறைய இளம் வீரர்களை பார்த்திருக்கிறோம். ஒவ்வொரு பருவத்திலும் ஒரு புதிய ஹீரோ உருவாகிறார். இதனால் ரியான் பராக் தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடினால், அதில் அவர் நன்கு தேர்ச்சி பெறுவதுடன், விராட் கோலிக்கான மாற்று வீரராகவும் உருவாகலாம்” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது 22 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால் இதுவரை இந்திய அணிக்காக 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,217 ரன்களையும், 23 டி20 போட்டிகளில் விளையாடி 723 ரன்களையும் சேர்த்துள்ளார். மேலும் அவர் இந்த இரு ஃபார்மெட்டிலும் சதம் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் ரியான் பராக் இந்திய அணிக்காக ஒரு ஒருநாள் மற்றும் 6 டி20 போட்டிகளில் விளையாடிய 72 ரன்களையும் 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். மேற்கொண்டு எதிர்வரும் வங்கதேச டி20 தொடரிலும் ரியான் பராக் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News