ஹர்திக் பாண்டியா அடிக்கடி எனது வீட்டிற்கு வருவார் - சேத்தன் ஷர்மாவின் அடுத்த சர்ச்சை!

Updated: Wed, Feb 15 2023 12:10 IST
'Hardik Pandya was lying on sofa…’: Chetan Sharma makes shocking revelations about star India all-ro (Image Source: Google)

கங்குலி பிசிசிஐ தலைவராக இருந்தபோது, சேத்தன் ஷர்மா தான் தேர்வுக்குழு தலைவராக செயல்பட்டு வந்தார். அப்போது விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்க கங்குலி, சேத்தன் ஷர்மாவுக்குத்தான் பெரும் பங்கு இருந்ததாக கருதப்பட்டது. பலரும் இதுகுறித்து கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால், எங்களுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என திட்டவட்டமாக இருவரும் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, அணித் தேர்வில் இருந்த அதிருப்தி காரணமாக சேத்தன் ஷர்மாவின் பதவி பறிக்கப்பட்டது. கங்குலியும் பசிசிஐ தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது ரோஜர் பின்னி தான் பிசிசிஐ தலைவராக இருக்கிறார். இந்நிலையில், மீண்டும் சேத்தன் ஷர்மாவுக்கு தேர்வுக்குழு தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சேத்தன் ஷர்மா தங்கியிருந்த இடத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று ரகசிய கேமரா வைத்து கண்காணித்தது. அப்போது, ஒரு நபரிடம் சேத்தன் ஷர்மா பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியது பதிவாகியுள்ளது.

இதில், ஹார்திக் பாண்டியா கேப்டன்ஸியை பெற்ற விவகாரம் குறித்தும் சேத்தன் ஷர்மா பேசியுள்ளார். “ஹார்திக் பாண்டியா எனது வீட்டுக்கு அடிக்கடி வருவார். பலமணி நேரம் அமர்ந்து பேசுவார். சிலமுறை எங்கள் வீட்டு சோபாவிலேயே அவர் சாய்ந்து தூங்கிவிடுவார். அந்த அளவுக்கு அவர் என்னுடம் நெருங்கி பழகினார்” எனக் கூறியுள்ளார்.

இதன்மூலம், குறுக்கு வழியில் கேப்டன் பதவியை பெறத்தான் ஹார்திக் பாண்டியா அப்படி சேத்தன் ஷர்மா வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்திருக்கிறார் என பலர் யூகங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். சேத்தன் ஷர்மா இப்படி பகீர் நெருப்பை பற்ற வைத்திருப்பதால், ஹார்திக் பாண்டியாவின் கேப்டன்ஸிக்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை