ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

Advertisement

இதையடுத்து களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஸத்ரான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 22 ரன்களை எடுத்திருந்த இப்ராஹிம் ஸத்ரான் ஜஸ்ப்ரித் பும்ராவிடம் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஆஃப்கானிஸ்தான் அணியின் அதிரடி தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் 21 ரன்களுக்கும், மற்றொரு நட்சத்திர வீரரான ரஹ்மத் ஷா 16 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்து எமாற்றமளித்தனர். 

Advertisement

அதன்பின் இணைந்த கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி - அஸ்மதுல்லா ஒமார்சாய் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்தனர்.  தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒமர்சாய் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 2 ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்ய, மறுப்பக்கம் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹஸ்மதுல்லா ஷாஹிதியும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

பின் மறுப்பக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அஸ்மதுல்லா ஒமார்சாய் 2 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 62 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹஸ்மதுல்லா ஷாஹிதி சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8 பவுண்டரி, ஒரு சிக்சர் என 80 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து அதிரடி வீரர்களான நஜிபுல்லா ஸத்ரான் 2 ரன்களுக்கும், முகமது நபி 19 ரன்களுக்கும் என ஜஸ்ப்ரித் பும்ராவிடம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் அதிரடி காட்டிய ரஷித் கானும் 16 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - இஷான் கிஷன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா 30 பந்துளில் அரைசதம் கடந்து, இந்திய அணி முதல் 10 ஓவர்களில் 94 ரன்களைக் குவிக்க உதவினார்.

Advertisement

இதில் தொடர்ந்து பவுண்டரி மழை பொழிந்த ரோஹித் சர்மா 63 பந்துகளில் சதமடித்து மிரட்டினார். இதன்மூலம் உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணிக்காக அதிவேகம சதடித்த வீரர் எனும் சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். மேலும் இது அவரது 7ஆவது உலகக்கோப்பை சதமதமாகவும் அமைந்தது. இதன்மூலம் உலகக்கோப்பை தொடரில் அதிக சதங்களை விளாசிய வீரர் எனும் சச்சினின் சாதனையையும் முறியடித்துள்ளார்.

இதற்கிடையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷன் 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 47 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 16 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 131 ரன்கள் எடுத்திருந்த ரோஹித் சர்மாவும் ரஷித் கன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.

அதன்பின் ஜோடி சேர்ந்த விராட் கோலி - ஸ்ரேயாஸ் ஐயர் இணையும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றனர். இதில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி அரைசதம் கட்ந்தார். இதன்மூலம் இந்திய அணி 35 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.   

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News