என்னுடைய பேட்டிங் ஆர்டர் குறித்தும் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை - கேஎல் ராகுல்!

Updated: Tue, Feb 07 2023 20:49 IST
Image Source: Google

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் சனிக்கிழமை நாக்பூரில் தொடங்குகிறது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். நாக்பூர் ஆடுகளத்தில் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் அமைக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கே எல் ராகுல், “நாங்கள் பயிற்சி முகாமில் பல்வேறு சூழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு விளையாடினோம். எங்களுடைய வீரர்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்திற்கு தங்களை தயார் படுத்திக் கொண்டு வருகிறார்கள்.

இந்தத் தொடரில் நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். இதில் குறைந்தபட்சம் மூன்று போட்டிகளில் வென்றால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும் என்று எங்களுக்கு தெரியும். இன்னும் எங்கள் அணியில் பிளேயிங் லெவன் குறித்து நாங்கள் எந்த முடிவையும் எடுக்கவில்லை. பல கடினமான முடிவுகள் குறித்து எடுக்கப்படலாம் என்பது மட்டும் உறுதி. நாங்கள் மூன்று சுழல் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாட ஆசைப்படுகிறோம்.

ஆனால் இன்னும் ஏதும் முடிவெடுக்கப்படவில்லை. ஆனால் சுழற் பந்துவீச்சை பலப்படுத்த வேண்டிய முடிவில் இருக்கிறோம். இதைப் போன்று சுழற்பந்துவீச்சு மட்டுமல்ல இந்தியாவின் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஏதேனும் பந்துவீச்சாளர் சூழலை சரியாக பயன்படுத்தினால் அதன் நிச்சயம் பேட்ஸ்மேன்களுக்கு ஆபத்தாக இருக்கும். வேகப்பந்துவீச்சாளர்கள் பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிப்பார்கள் என்பது எங்களுக்கு தெரியும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாட வேண்டுமா, பொறுமையாக விளையாட வேண்டுமா என்பதை குறித்து எல்லாம் நாங்கள் யோசிக்கவில்லை. சூழலுக்கு ஏற்ப எங்களுடைய திட்டத்தை மாற்றிக்கொண்டு நாங்கள் விளையாடுவோம். என்னுடைய பேட்டிங் ஆர்டர் குறித்தும் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. தொடக்க வீரராக களமிறங்க நான் ஆசைப்படுகிறேன். எனினும் அணி நிர்வாகம் என்னை நடுவரிசையில் விளையாட வேண்டும் என்று கூறினால் அதற்கும் நான் தயாராக இருக்கிறேன்” என்று கே எல் ராகுல் பதில் அளித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை