இத்தொடரில் இந்திய அணி வெற்றிபெறுவது கடினம் - ஆகாஷ் சோப்ரா!

Updated: Fri, Dec 08 2023 11:09 IST
இத்தொடரில் இந்திய அணி வெற்றிபெறுவது கடினம் - ஆகாஷ் சோப்ரா! (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் முதலாவதாக நடைபெறும் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு சூர்யகுமார் யாதவ் மற்றும் கேஎல் ராகுல் தலைமையிலான இந்தியா களமிறங்க உள்ளது.

இந்நிலையில் இந்த சுற்றுப்பயணத்தில் நடைபெறும் 3 வகையான தொடர்களிலும் இந்தியா அனைத்து போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றிகளை பெறுவது கடினம் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பேசிய அவர்,  “இத்தொடரில் அனைத்து போட்டிகளிலும் தொடர்ச்சியாக இந்தியா வெல்வதற்கான வாய்ப்புகள் இல்லை. 

ஏனெனில் ஒருநாள் கிரிக்கெட்டில் நாம் ஒரு அணியாக சேர்ந்து விளையாடவில்லை. இங்குள்ள சூழ்நிலைகள் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கலாம். அவர்கள் உலகக் கோப்பையில் ஓரளவு நன்றாக விளையாடினார்கள். ஆனாலும் இந்த சுற்றுப்பயணத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக நான் கருதுகிறேன். ஒருவேளை நான் சொல்வது தவறாகவும் இருக்கலாம். 

எனவே நான் சொல்வது தவறாக இருந்து இந்தியா வென்றால் மகிழ்ச்சியடைவேன் இந்த சுற்றுப்பயணத்தில் சில போட்டிகள் தென்னாப்பிரிக்காவுக்கு சாதகமாக இருக்கலாம். மொத்தத்தில் 5 – 3 என்ற கணக்கில் இந்த சுற்றுப்பயணத்தில் தென்னாப்பிரிக்கா வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை