பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிகெட் தொடர் அடுத்த வாரம் முதல் தொடங்கவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. 

Advertisement

மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்கும் இறுதிக்கட்ட இந்திய அணியையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது. இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக ஹர்ஷித் ரானா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசயம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டு வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

Advertisement

இந்நிலையில் எதிவரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் யார் யார் இடம்பிடிப்பார்கள் என்பது குறித்து இப்பதிவில் பார்ப்போம். அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் துணை கேப்டன் ஷுப்மான் கில் ஆகியோர் களமிறங்குவது உறுதியாகியுள்ளது. அதேசமயம் மூன்றாம் இடத்தில் நட்சத்திர வீரர் விராட் கோலியும் தனது இடத்தை உறுதிசெய்வார். 

அவரைத்தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் 4ஆம் வரிசையிலும், கேஎல் ராகுல் 5ஆம் இடத்திலும், ஹர்திக் பாண்டியா 6ஆம் இடத்திலும் விளையாடுவார்கள். இதுதவிர்த்து ஆல் ரவுண்டர்கள் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்ஸர் படேல் ஆகியோர் தங்கள் இடங்களை உறுதிசெய்திருக்கும் நிலையில், மற்றொரு சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவும், அணியின் வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது ஷமி மற்றும் அர்ஷ்தீப் சிங் இடம்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஒருவேளை வேகப்பந்து வீச்சில் எதிரணியை அழுத்ததிற்கு தள்ள விரும்பும் பட்சத்தில் ஹர்ஷித் ரானாவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். அப்படி ஹர்ஷித் ரானா இடம்பிடிக்கும் பட்சத்தில் அர்ஷ்தீப் சிங் லெவனில் இடம்பிடிக்காமல் போகலாம். மேற்கொண்டு குல்தீப் யாதவிற்கு பதிலாக வருண் சக்ரவர்த்தியும் ஒரு சில போட்டிகளில் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கும் வாய்ப்பும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா/அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, குல்தீப் யாதவ்.

Advertisement

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹார்திக் பாண்டியா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா. ரிஸர்வ் வீரர்கள் - யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது ஷமி, ஷிவம் தூபே

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News