இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலம் எதிவரும் நவம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் சௌதீ அரேபியாவின் ஜித்தாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஏலத்தில் மொத்தம் 1574 வீரர்கள் (1,165 இந்தியர்கள் மற்றும் 409 வெளிநாட்டினர்) தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர்.

Advertisement

இதில் இந்தியாவைச் சேர்ந்த 1,165 வீரர்களும், வெளிநாடுகளைச் சேர்ந்த 409 வீரர்களும் பங்கேற்கின்றனர். இதில் வெளிநாடுகளில் அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 91 வீரர்களும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 76 வீரர்களும் பங்கேற்கவுள்ள நிலையில், குறைந்த பட்சமாக ஐக்கிய அரபு அமீரகம், இத்தாலியைச் சேர்ந்த ஒரு வீரர் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளனர்.  மேற்கொண்டு 320 சர்வதேச வீரர்களும், 1,224 ஆன்கேப்ட் வீரர்களும், 30 அசோஷியட் தேசத்தை சேர்ந்த வீரர்களும் பங்கேற்கின்றனர்.

Advertisement

இந்த மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளின் கேப்டனாக இருந்த ரிஷப் பந்த், கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தக்கவைக்கப்படவில்லை.  மேலும் இந்த மூன்று வீரர்களும் ரூ.2 கோடியை தங்கள் அடிப்படை தொகையாக நிர்ணயித்துள்ளனர். இதில் லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுலை எந்த அணி எவ்வளவு தொகைக்கு ஏலத்தில் எடுக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 தனது கிரிக்கெட்டை ரசிக்க மற்றும் இறுதியில் இந்தியா டி20ஐ அணியில் மீண்டும் இடம் பெறுவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கும் என்று கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய கேஎல் ராகுல் அதன்பின் இந்திய டி20 அணியில் இடம்பிடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். 

இதுகுறித்து பேசிய அவர், “நான் டி20 அணியிலிருந்து சிறிது காலம் வெளியேறிவிட்டேன், ஒரு வீரராக நான் எங்கு நிற்கிறேன் என்பது எனக்குத் தெரியும், மீண்டு வர நான் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். எனவே இந்த ஐபிஎல் சீசனில் நான் திரும்பிச் சென்று எனது கிரிக்கெட்டை ரசிக்கக்கூடிய அந்த தளத்தை எனக்கு வழங்க நான் எதிர்நோக்குகிறேன். மேலும் இந்திய டி20 அணிக்கு மீண்டும் திரும்புவதுடன் எனது இடத்தை தக்கவைப்பதே என்னுடைய நோக்கமாகும். 

அதனால் நான் இத்தொடரை புதிதாக தொடங்க விரும்பினேன். நான் எனது விருப்பங்களை ஆராய விரும்பினேன், மேலும் எனக்கு சுதந்திரம் கிடைக்கும் இடத்திற்குச் சென்று விளையாட விரும்பினேன், அங்கு குழுவின் சூழல் இலகுவாக இருக்கும். சில நேரங்களில் நீங்கள் விலகிச் சென்று உங்களுக்காக நல்லதைக் கண்டுபிடிக்க வேண்டும். அதன் காரணமாகவே நான் தற்போது லக்னோ அணியில் இருந்து விலகி மெகா ஏலத்தில் பங்கேற்க உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

இந்திய டி20 அணிக்காக கடந்த 2016ஆம் ஆண்டு அறிமுகமான கேஎல் ராகுல், இதுவரை இந்திய அணிக்காக 72 போட்டிகளில் விளையாடி அதில் 2 சதங்கள் மற்றும் 22 அரைசதங்களுடன் 2,265 ரன்களைச் சேர்த்துள்ளார். ஆனால் 2022ஆம் ஆண்டு நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பெரிதளவில் சோபிக்க தவறிய இவர், அதன்பின் இந்திய டி20 அணியில் இடம்பிடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News