இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் என்ற வரிசையில் இருந்த முக்கியமான வீரர் கே எல் ராகுல். ரோஹித் சர்மா காயம் காரணமாக இல்லாத போதெல்லாம் கே எல் ராகுல் தான் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக்கு கேப்டனாக செயல்பட்டார். ஆனால் ஹர்திக் பாண்டியாவின் அசுர வளர்ச்சி காரணமாக ஒரு நாள் மற்றும் டி20 போட்டியில் கே எல் ராகுல் கேப்டன் பதவியை இழந்தார். மேலும் டெஸ்ட் போட்டியில் கே எல் ராகுல் சிறப்பாக விளையாடாத காரணத்தால் நீக்கப்பட்டார்.

Advertisement

எனினும் நடப்பு ஐபிஎல் சீசனில் கம்பீரின் வழிகாட்டுதலின் கீழ் கேல் ராகுல் கேப்டன் பதவியில் பல முன்னேற்றத்தை கண்டார். ஆனால் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகும் நிலை அவருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் தோனி, ரோஹித், கோலி ஆகியோரிடம் இருந்து பிடித்தது என்ன என்பது குறித்து கே எல் ராகுல் பேசியுள்ளார். 

Advertisement

இதுகுறித்து பேசிய அவர், “ரோஹித் சர்மா கேப்டனாகவும் தலைவராகவும் அறிவு கூர்மையாக இருப்பார். ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் களத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து முன்கூட்டியே பணியாற்றுவார். ஒவ்வொரு வீரரின் பலம் என்ன என்பது குறித்து ரோகித் சர்மாவுக்கு நன்றாகவே தெரியும். தன் அணியில் உள்ள அனைத்து வீரர்களின் ஆட்ட நுணுக்கத்தையும் ரோஹித் சர்மா அறிந்து கொள்வார்.

விராட் கோலியை பொறுத்தவரை ஒரு கேப்டன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான தரத்தை அதிகப்படுத்தி விட்டு சென்று விட்டார். கிரிக்கெட் மீதான பற்று, வெறி அணியை முன்னின்று வழி நடத்துவது, எப்படி சாதிப்பது என்பதெல்லாம் எனக்கு கோலியிடம் மிகவும் பிடித்த விஷயமாகும். ஒரு கிரிக்கெட் வீரர் உடல் நலத்தை எவ்வாறு பேணி பாதுகாக்க வேண்டும், சாப்பாட்டு விஷயத்தில் எவ்வளவு கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதை எல்லாம் நான் விராட் கோலி இடம் பார்த்து தான் கற்றுக் கொண்டேன்.

தோனி தான் என்னுடைய முதல் கேப்டன். நான் கிரிக்கெட் குறித்து பல விஷயங்களை அவரிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன். அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரர்களுடனும் தோனி நல்ல உறவை வைத்துக் கொள்வார். இதன் மூலம் தோனிக்காக மற்ற வீரர்கள் களத்தில் இறங்கி போராடுவார்கள். அவர் கூடவே அனைவரும் இருப்பார்கள். இந்த விஷயத்தை நான் தோனியிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன்” என அவர் தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News