இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 4 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்று போட்டிகளில் வெற்றிபெற்றதுடன், 3-1 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

Advertisement

ஏற்கெனவே இங்கிலாந்து அணி இத்தொடரை இழந்துள்ள நிலையில், கடைசி டெஸ்ட் போட்டியிலாவது வெற்றிபெற்று ஆறுதலை தேட முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. அதேசமயம் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளதால், இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை நிறைவு செய்ய இந்திய அணியும் ஆர்வம் காட்டி வருகிறது. 

Advertisement

இந்நிலையில் பணிச்சுமை காரணமாக நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வளிக்கப்பட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு, மூன்று மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகிய கேஎல் ராகுல் இந்த போட்டியிலும் விளையாடுவது சந்தேகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

மேலும் அவர் தனது காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால் மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளதாகவும் சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவரால் நிச்சயம் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறமாட்டார் என கூறப்படுகிறது. முன்னதாக கேஎல் ராகுல் முழு உடற்தகுதியை எட்டிவிட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அவர் சிகிச்சைகாக லண்டன் சென்றுள்ளதாக கூறுபடுவது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதன் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஒருசில மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கேஎல் ராகுல் இடத்தில் விளையாடிவரும் ராஜத் பட்டிதார் சொதப்பி வரும் நிலையில் அந்த இடத்தில் தேவ்தத் படிக்கல்லிற்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அதேசமயம் அறிமுக டெஸ்ட் போட்டியில் அசத்திய ஆகாஷ் தீப்பிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு, முகமது சிராஜிற்கு ஓய்வளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News