இந்தூரில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் ஆஃப்கானிஸ்தான் நிர்ணயித்த 173 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ரோஹித் சர்மா டக் அவுட்டான நிலையில் அடுத்ததாக வந்த விராட் கோலி அதிரடியாக விளையாடி 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய ஜெய்ஸ்வால் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக செயல்பட்டு 68 ரன்கள் குவித்து வெற்றியை உறுதி அவுட்டானார். 

Advertisement

இந்நிலையில் பொதுவாகவே ஆரம்பத்தில் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் விளையாடக்கூடிய விராட் கோலியை முதல் பந்திலிருந்தே 180 – 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட வேண்டும் என்று நினைப்பது இந்தியாவுக்கு ஆபத்தை கொடுக்கும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா எச்சரித்துள்ளார். இதற்கான காரணத்தைப் பற்றி தம்முடைய யூடியூப் பக்கத்தில் அவர் கூறியுள்ளார். 

Advertisement

இதுகுறித்து பேசிய அவர், “கடந்த டி20 உலகக் கோப்பைக்கு முன் அவர் இதை செய்தார் என்று நினைக்கிறேன். அதாவது முதல் பந்திலிருந்தே அவர் அதிரடியாக விளையாட முயற்சித்தார். அப்படி விளையாடுவதற்கு அவரிடம் திறமை இருக்கிறது. அப்படி விளையாட நினைத்தால் கண்டிப்பாக அவரால் எளிதாக அடிக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் விராட் கோலி எப்படி விளையாடினால் அணிக்கு பொருந்தும் என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும்.

குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறப் போகும் 2024 டி20 உலகக் கோப்பை மைதானங்களில் 150 – 160 ரன்கள் மட்டுமே சராசரியாக அடிக்க முடியும். அங்கே 200 – 220 ரன்கள் பிட்ச் இருக்காது. எனவே அங்கே உங்களில் ஒருவர் இன்னிங்ஸை பிடித்து விளையாட வேண்டும். ஆனால் அங்கே நீங்கள் விராட் கோலி 180 – 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட வேண்டுமென்று எதிர்பார்த்தால் அவரை நீங்கள் வீணடிக்கிறீர்கள் என்று அர்த்தம். எனவே நமக்கு 139 ஸ்ட்ரைக் ரேட்டில் அடிக்கக்கூடிய விராட் கோலி தேவை.

189 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட வேண்டும் என்று எதிர்பார்த்தால் அவரிடமிருந்து தொடர்ச்சியாக ரன்கள் வராது. காட்டுக்குள் சிங்கம் இருந்தால் நீங்கள் ஏன் அங்கே செல்ல பயப்பட வேண்டும்? சிங்கம் போல விளையாடக்கூடிய விராட் கோலி அங்கே கண்டிப்பாக இருப்பார். ஆனால் அவர் கடைசி வரை நின்றால் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாகும் என்பது உங்களுக்கு தெரியும். எனவே காட்டுக்கு ராஜா போல விராட் கோலி போட்டியின் கடைசி வரை நிற்பது அவசியமாகும்” என்று கூறியுள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News