வங்கதேசத்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2 – 1 என்ற கணக்கில் இழந்து, அடுத்ததாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 – 0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் வெற்றியுடன் கைப்பற்றி தக்க பதிலடி கொடுத்து. அதனால் 2023 ஜூன் மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷி பைனலுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பையும் இந்தியா தக்க வைத்துக் கொண்டது. 

Advertisement

ஆனால் இந்த சுற்றுப்பயணத்தில் காலத்திற்கும் இந்திய அணியினரும் ரசிகர்களும் மறக்க முடியாத அளவுக்கு வங்கதேச வீரர் மெஹதி ஹசன் தொடர்ச்சியான பயத்தை காட்டினார் என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக தாக்கா கிரிக்கெட் மைதானம் அவருடைய கோட்டையாக திகழ்ந்தது என்றே சொல்லலாம். ஏனெனில் இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகள் தாக்கா மைதானத்தில் நடைபெற்றது. 

Advertisement

அதில் முதல் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா நிர்ணயித்தை வெறும் 187 ரன்களை துரத்திய வங்கதேசமும் ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 136/9 என சரிந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. அப்போது 8ஆவது இடத்தில் களமிறங்கி கேஎல் ராகுல் தவற விட்ட கேட்ச்சை பயன்படுத்திய மெஹதி ஹசன் 38 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியை பறித்து வங்கதேசத்திற்கு 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று கொடுத்தார்.

அதன் பின் நடைபெற்ற 2ஆவது போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் ஒரு கட்டத்தில் 69/6 என திண்டாடியது. ஆனால் அப்போது முகமதுல்லாவுடன் ஜோடி சேர்ந்து மீண்டும் விஸ்வரூபம் எடுத்த அவர் 8 பவுண்டரி 4 சிக்ஸருடன் சதமடித்து 100 ரன்கள் குவித்தார். அவரது அதிரடியால் வங்கதேசம் நிர்ணயித்த 272 ரன்களை வெற்றிகரமாக துரத்த முடியாமல் 5 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் கடைசி நேரத்தில் சொதப்பி தோற்ற இந்தியா வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் அடுத்தடுத்த 2 ஒருநாள் தொடர்களில் (2015, 2022) தோல்விகளை சந்தித்தது.

அதே மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியிலும் 188 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. ஆனால் மீண்டும் கோட்டையான தாக்காவில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் வெறும் 145 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு பேட்டிங்கில் சொதப்பினாலும் பந்து வீச்சில் மாயாஜாலம் நிகழ்த்திய மெஹதி ஹசன் சுப்மன் கில் 7, புஜாரா 6, விராட் கோலி 1, அக்சர் படேல் 34, ரிஷப் பண்ட் 9 என 5 முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை எடுத்து மிகப்பெரிய சவாலை கொடுத்தார்.

அப்படி இந்த சுற்றுப்பயணத்தில் முழுக்க முழுக்க இந்தியாவுக்கு தனி ஒருவனாக சவாலை கொடுத்து கடைசி இன்னிங்சில் தம்மையும் வெறும் 1 ரன்னில் அவுட்டாக்கிய திறமையால் வியந்த விராட் கோலி தாம் கையொப்பமிட்ட தன்னுடைய ஜெர்சியை தாமாக முன் சென்று மெஹதி ஹசனுக்கு பரிசளித்துள்ளார். அதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த மெஹதி ஹாசன் “சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான விராட் கோலியின் சிறப்பு நினைவு பரிசு” என்ற தலைப்புடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

இறுதியில் இருவரும் கட்டிப்பிடித்து சிரித்த முகத்துடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்கள். தற்சமயத்தில் இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் நவீன கிரிக்கெட்டில் மிகச்சிறந்த ஜாம்பவானாக போற்றப்படும் விராட் கோலி தங்களது நாட்டு சூப்பர் ஸ்டாரின் திறமையை மதித்து தாமாக முன்வந்து கையொப்பமிட்ட ஜெர்ஸி பரிசளித்ததை பார்த்த வங்கதேச ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்து நன்றி தெரிவிக்கிறார்கள்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News