நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி இன்று பே ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தது. ஆனால் அவர்களின் இந்த முடிவு விணையை ஏற்படுத்தும் என அப்போது ரசிகர்களுக்கு புரியவில்லை.

Advertisement

அதன்படி முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்ட தொடங்கியது. எந்தவொரு ஓவரிலும் அடங்க மாட்டோம் என தொடக்க வீரர்களே நாலாபுறமும் பந்தை சிதறடித்தனர். அந்தவகையில் தொடக்க வீரர் பென் டக்கெட் 68 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 84 ரன்களை விளாசினார். மற்றொருபுறம் ஒல்லி போப் 65 பந்துகளில் 42 ரன்களை குவித்தார்.

Advertisement

இவர்களின் ரன் வேட்டையால் இங்கிலாந்து அணி 16 ஓவர்களிலெல்லாம் 100 ரன்களை கடந்துவிட்டது. டாப் ஆர்டர் விக்கெட்கள் சரிந்த பிறகாவது ரன் வேகம் குறையும் என எதிர்பார்த்தால் அதற்கும் ஆப்பு வைத்தார் ஹாரி புரூக். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ப்ரூக் பவுண்டரிகளுக்கு பந்தை அனுப்பிக்கொண்டே இருந்தார். 81 பந்துகளை சந்தித்த புரூக் 15 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் என 89 ரன்களை அடித்து துவம்சம் செய்தார்.

இதனால் இங்கிலாந்து அணி 58.2 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 325 ரன்களை அடித்து டிக்ளர் செய்தது. இங்கிலாந்து அணி சமீப காலமாக பேஷ்பால் என்ற புதிய முறையை கையாண்டு வருகிறது. அந்த அணியின் புதிய பயிற்சியாளர் மெக்கலமும் - ஸ்டோக்ஸும் இணைந்து அதிரடியை மட்டுமே நம்பி இருக்கும் முறை இது. இதனால் பல சமயங்களில் வெற்றி கிடைத்துள்ளதால் தொடர்ந்து செய்கின்றனர்.

இங்கிலாந்தின் தாண்டவத்திற்கு பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி நிதானமாக விளையாடுகிறோம் என அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர். இதனால் நியூசிலாந்து அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 37 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இதில் டெவான் கான்வே 17 ரன்களுடனும், நெய்ல் வாக்னர் 4 ரன்களுடனும களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News