இந்தியாவின் பாரம்பரியமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் மிக முக்கியமானது ரஞ்சி கோப்பை கிரிகெட் தொடர். அந்தவகையில் நடப்பாண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள சத்தீஸ்கர் மற்றும் தமிழ்நாடு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

Advertisement

அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த ரஞ்சி கோப்பை போட்டியானது கோயாம்புத்தூரில் உள்ள எஸ்என்ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் முதலில் பேட்டிங் செய்த சத்தீஸ்கர் அணியில் ஆயுஷ் பாண்டே சதம் விளாச, அனுஜ் திவாரி, சஞ்சீத் தேசாய், எக்னாத் கெர்கெர், அஜய் மண்டல் ஆகியோர் அரைசதங்களை விளாசி அசத்தினர். இதன் முதல் இன்னிங்ஸில் சத்தீஸ்கர் அணி 500 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.

Advertisement

அந்த அணியில் அதிகபட்சமாக ஆயுஷ் பாண்டே 124 ரன்களையும், அனுஜ் திவாரி 84 ரன்களையும், சஞ்சீத் தேசாய் 82 ரன்களையும் சேர்த்தனர். தமிழ்நாடு அணி தரப்பில் அஜித் ராம் 4 விக்கெட்டுகளயும், சித்தார்த் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து முதால் இன்னிங்ஸைத் தொடங்கிய தமிழ்நாடு அணியில் ஷாரூக் கான், ஆண்ட்ரே சித்தார்த் ஆகியோரு அரைசதம் கடந்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறிய காரணத்தால் 77.2 ஓவர்களில் 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது பாலோ-ஆன் ஆனது.

இதில் ஆண்ட்ரே சித்தார்த் 55 ரன்களையும், ஷாரூக் கான் 50 ரன்களையும், ஜெகதீசன் 49 ரன்களையும் எடுத்திருந்தனர். சத்தீஸ்கர் அணி தரப்பி ஷுபம் அகர்வால் 5 விக்கெட்டுகளையும், ஜிவேஷ் புடே 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து 241 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய தமிழ்நாடு அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 76 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது.

இப்போட்டியில் கேப்டன் நாராயணன் ஜெகதீசன் 60, ஆந்த்ரே சித்தார்த் 41, பூபதி குமார் 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதேசமயம் நான்காவது விக்கெட்டிற்கு களமிறங்கிய விஜய் சங்கர் 165 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 106 ரன்கள் விளாசியும், பிரதோஷ் ரஞ்ஜன் பால் 5 பவுண்டரிகளுடன் 39 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். விஜய் சங்கரின் சிறப்பான ஆட்டம் காரணமாக தமிழ்நாடு அணி இப்போட்டியில் தோல்வியைத் தவிர்த்ததுடன் ஆட்டத்தை டிராவில் முடித்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News