ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியின் தோல்வியை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் மீதான விமர்சனங்களும் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு எதிரான விமர்சனங்களும் தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வருகின்றன . கடந்த 2021 ஆம் ஆண்டின் 20 ஓவர் உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரோஹித் சர்மா 2022 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு பிறகு இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாகவும் இருந்து வருகிறார் .

Advertisement

இவரது தலைமையின் கீழ் இந்திய அணி உள்நாட்டு டெஸ்ட் போட்டிகளில் பல வெற்றிகளை பெற்றிருந்தாலும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களிலும் ஐசிசி போட்டித் தொடர்களிலும் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது . இதற்கு எதிராக பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் கடுமையான விமர்சனங்களை கூறி வருகின்றனர் .

Advertisement

மேலும் ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் கடந்த ஒரு வருடங்களாகவே சிறப்பானதாக இல்லை . ஒரு தொடரில் ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடும் அவர் மற்ற போட்டிகளில் சொற்பரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறுகிறார் . இதனால் அவர் மீதான அழுத்தமும் விமர்சனங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன .

இதுகுறித்து பேசிய கிரேம் ஸ்மித், “ரோஹித் சர்மாவிற்கு ஒரு புத்துணர்ச்சி தேவைப்படுகிறது . நம்முடைய தனிப்பட்ட ஆட்டம் கேப்டன் பொறுப்பிலும் நிச்சயமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் . ரோஹித் சர்மா ஒரு மிகச் சிறந்த வீரர் என்றாலும் கடந்த ஓராண்டுகளாக அவர் சிறப்பாக ஆடவில்லை . ஒரு அணிக்கு கேப்டனாக இருப்பதில் மிகப்பெரிய சவால் நம்முடைய தனிப்பட்ட பார்ம் . அது நிச்சயமாக போட்டியிலும் தலைமை பண்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்று.

யாரும் தனிப்பட்ட முறையில் அவருடைய கேப்டன்சி ஸ்டைல் மற்றும் தலைமை பண்பை பற்றி விமர்சிக்கவில்லை அனைவரும் அவருடைய தனிப்பட்ட ஆட்டத் திறனை பற்றி தான் கேள்வி எழுப்புகின்றனர் . அவர் மிகச் சிறப்பாக தன்னுடைய பங்களிப்பை வழங்கினால் அதன் தாக்கம் கேப்டன் பொறுப்பில் நிச்சயமாக இருக்கும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடிய வீரர்கள் தான் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கு காரணமாக இருந்தவர்கள் என்பதை ஒரு தோல்வியை வைத்து நாம் மறந்து விடக்கூடாது” என தெரிவித்தார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News