டி20 உலகக்கோப்பை தொடரின் கனவு அணியை அறிவித்த ஹர்ஷா போக்லே!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த ஒன்பதாவது ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாக விராட் கோலியும், தொடர் நாயகனாக ஜஸ்பிரித் பும்ராவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு உலகின் பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றது. இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான சிறந்த பிளேயிங் லெவனை பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்லே அறிவித்துள்ளார். அதன்படி அவரது அணியின் தொடக்க வீரர்களாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஆஃப்கானிஸ்தான் வீர்ர் ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆகியோரைத் தேர்வு செய்துள்ளார். மேற்கொண்டு மூன்றாம் இடத்திற்கு வெஸ்ட் இண்டீஸின் நிக்கோலஸ் பூரனை தேர்வு செய்யதுள்லார்.
அதன்பின் நான்காம் இடத்திற்கு இந்திய அணியின் சூர்யகுமார் யாதவையும், 5ஆம் இடத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் ஹென்ரிச் கிளாசென் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். மேலும் அணியின் ஆல் ரவுண்டர்களாக ஆஸ்திரேலியாவின் மார்கஸ் ஸ்டொய்னிஸ் மற்றும் இந்திய அணியின் ஹர்திக் பாண்டியாவைத் தேர்வு செய்துள்ள அவர் சுழற்பந்து வீச்சாளர்களாக ரஷித் கான் மற்றும் குல்தீப் யாதவை தேர்ந்தெடுத்துள்ளார். மேற்கொண்டு அணியின் வேகப்பந்து வீச்சாளர்களாக இந்திய வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா, மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு அணியில் இடம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
ஹர்ஷா போக்லே அறிவித்த டி20 உலகக்கோப்பை தொடரின் சிறந்த அணி: ரோகித் சர்மா (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், நிக்கோலஸ் பூரன், சூர்யகுமார் யாதவ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஹென்ரிச் கிளாசென், ஹர்திக் பாண்டியா, ரஷித் கான், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.