இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய ஆண்கள் கிரிக்கெட் அணி முதலில் நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என இழந்தது. இதற்கடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரை தற்பொழுது விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதலில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

Advertisement

இன்று விசாகப்பட்டினத்தில் தொடரின் இரண்டாவது போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாசை இழந்து முதலில் பேட்டி செய்த இந்திய அணி 117 ரன்களுக்கு 26 ஓவர்களில் சுருண்டது. மிட்சல் ஸ்டார்க் அபாரமாக பந்து வீசி ஐந்து விக்கட்டுகளை அள்ளினார். இந்திய அணிக்கும், இந்திய அணி ரசிகர்களுக்கும் இது ஒருபுறம் சோகம் என்றால் அதற்கு அடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கில் செய்தது பெரிய சோகமாக அமைந்தது. 

Advertisement

கடந்த ஆட்டத்தில் துவக்க ஜோடியாக ஆஸ்திரேலியா அணிக்கு களம் கண்ட ஹெட் மற்றும் மார்ஷ் இந்த முறையும் களம் கண்டு இந்தியா கொடுத்த இலக்கை வெறும் பதினொரு ஓவர்களில் அடித்து துவம்சம் செய்து விட்டார்கள். ஹெட் முப்பது பந்துகளில் 10 பவுண்டரிகள் உடன் 51 ரன்களையும், மார்ச் 36 பந்துகளில் ஆறு பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 66 ரன்களையும் குவித்து, இந்தியா அணிக்கு பத்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை பரிசளித்தார்கள்.

வெற்றிக்குப் பிறகு பேசிய டிராவீஸ் ஹெட், “அணியின் வெற்றிக்கு பங்களித்ததில் மகிழ்ச்சி. பார்ட்னர்ஷிப் உருவானது சிறப்பான விஷயம். இன்று நாங்கள் கொஞ்சம் செட்டில் ஆனோம் நேரம் எடுத்தோம். கடைசி ஆட்டத்தில் நான் கொஞ்சம் வேகமாக சென்று விக்கட்டை கொடுத்து விட்டேன். பவர் ஹிட்டர் பெரிய ஆளான மார்ஷ் அதிரடியில் ஈடுபடும் பொழுது எதிர் முனையில் இருப்பது மகிழ்ச்சியானது. 

இலக்கை துரத்துவதில் எங்கள் இருவரில் ஒருவர் களத்தில் நிற்போம் என்று நினைத்தோம். நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் நின்று அதிரடியாக முடிந்தது அரிது. பேட்டிங்கை தொடங்கும் எனது அனுபவம், ஒருவர் அதிரடியாக விளையாடுகிறார் என்றால் அவருக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்பது. ஆனால் இன்று நாங்கள் இருவருமே அதிரடிக்கு செல்ல வேண்டும் என்று உணர்ந்தோம். நாங்கள் மிகவும் கணக்கிட்டு விளையாடினோம் இது மிகவும் நல்ல பார்ட்னர்ஷிப். இது மிக சுவாரசியமாக இருந்தது” என தெரிவித்தார். 

அவரைத் தொடர்ந்து பேசிய மிட்சல் மார்ஷ், “இது கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது. சின்ன டார்கெட்டை துரத்தும் பொழுது எப்பொழுதும் துவக்கம் முக்கியம். ஹெட் அதிரடியில் இறங்குவார் என்று நான் நம்பினேன். உண்மையைச் சொல்வதானால் நான் மெதுவாக விளையாட முடியும் என்று நினைத்தேன். நான் மேல் வரிசையில் வந்து பந்து ஸ்விங் ஆகும்பொழுது அடித்து விளையாடுவதை விரும்புகிறேன். 

Advertisement

ஸ்டார்க் புத்திசாலித்தனமாக பந்து வீசினார். அவரது பந்துவீச்சில் ஸ்லீப்பில் நிற்பது பயங்கரமானது. ஏனென்றால் பேட் விளிம்பில் பட்டு மணிக்கு 80 மைல் வேகத்துக்கு பந்து பறக்கிறது. ஆனால் அவர் இப்படி பந்து வீசுவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தியாவில் ஒரு தொடரை வெல்ல மிகச் சிறப்பான ஒரு வாய்ப்பு தற்பொழுது கிடைத்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News