ரோஹித், கோலி ஆகியோர் துலீப் கோப்பை தொடரில் விளையாடிருக்க வேண்டும் - சுனில் கவாஸ்கர்!

Updated: Mon, Aug 19 2024 20:30 IST
Image Source: Google

இந்தியாவில் பாரம்பரியமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மேலும் அடுத்த மாதம் வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளதால், அதற்கு தயாராகும் வகையில்  இந்த தொடரில் இந்தியாவின் பல மூத்த வீரர்கள் விளையாடுகிறார்கள்

இத்தொடரில் சிறப்பாக செயல்படுவதன் மூலம், வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் வீரர்கள் தங்கள் இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது. அந்தவகையில் இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரிஷப் பந்த் என பல நட்சத்திர வீரர்கள் இத்தொடரில் பங்கேற்கின்றனர். ஆனால், இந்த துலீப் கோப்பை தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் துலீப் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் பங்கேற்காதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "துலீப் கோப்பை தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை தேர்வுக்குழு தேர்வு செய்யவில்லை, எனவே அவர்கள் அதிக போட்டி பயிற்சி இல்லாமல் வங்கதேச டெஸ்ட் தொடருக்கு செல்வார்கள்.

இருப்பினும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற ஒரு வீரரை நாம் மென்மையாகவும், கவனமாகவும் கையாள வேண்டும் என்பது புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தாலும், பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வதற்கு இடையில் சிறிது நேரம் ஒதுக்கியிருக்க வேண்டும். எந்தவொரு விளையாட்டிலும் ஒரு வீரர் தனது 30 வயதின் நடுப்பகுதியை அடைந்தவுடன், வழக்கமான போட்டியை விட, கூடுதல் பயிற்சிகளை மேற்கொள்வது அவர்களின் தரத்தை பராமரிக்க உதவும்" என்று தெரிவித்துள்ளார்.

துலீக் கோப்பை தொடருக்கான அணிகள்

அணி ஏ: ஷுப்மான் கில் (கே), மயங்க் அகர்வால், ரியான் பராக், துருவ் ஜூரல், கேஎல் ராகுல், திலக் வர்மா, ஷிவம் துபே, தனுஷ் கோட்டியன், குல்தீப் யாதவ்,ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, கலீல் அகமது, அவேஷ் கான், வித்வத் கவேரப்பா, குமார் குஷாக்ரா, ஷாஸ்வத் ராவத்.

அணி பி: அபிமன்யு ஈஸ்வரன் (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்ஃப்ராஸ் கான், ரிஷப் பந்த், முஷீர் கான், நிதிஷ் குமார் ரெட்டி (உடற்தகுதி), வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், யாஷ் தயாள், முகேஷ் குமார், ராகுல் சாஹர், ஆர் சாய் கிஷோர், மோஹித் அவஸ்தி, என். ஜெகதீசன்.

அணி சி: ருதுராஜ் கெய்க்வாட் (கே), சாய் சுதர்ஷன், ராஜத் படிதார், அபிஷேக் போரல், சூர்யகுமார் யாதவ், பாபா இந்திரஜித், ஹிருத்திக் ஷோக்கீன், மானவ் சுதர், உம்ரான் மாலிக், வைஷாக் விஜய்குமார், அன்ஷுல் கம்போஜ், ஹிமான்ஷு சவுகான், மயங்க் மார்கண்டே, ஆர்யன் ஜூயல், சந்தீப் வாரியர்.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

அணி டி: ஸ்ரேயாஸ் ஐயர் (கே), அதர்வா டைடே, யாஷ் துபே, தேவ்தத் பாடிக்கல், இஷான் கிஷன், ரிக்கி புய், சரண்ஷ் ஜெயின், அக்ஸர் படேல், அர்ஷ்தீப் சிங், ஆதித்யா தாகரே, ஹர்ஷித் ராணா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சென்குப்தா, கேஎஸ் பாரத், சௌரப் குமார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை