ஐசிசி உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டி: சிறந்த ஃபீல்டருக்கான விருதை வென்றார் விராட் கோலி!

Updated: Mon, Nov 20 2023 13:15 IST
Image Source: Google

அஹ்மதாபாத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. உலகக்கோப்பை எட்டிப்பிடிக்கும் தூரத்தில் இருந்தும், மீண்டும் உலகக்கோப்பையை இந்திய அணி பறிகொடுத்துள்ளது. இதையடுத்து இந்திய அணி வீரர்கள் பலரும் சோகத்துடன் ஓய்வறை சென்றனர்.

சிராஜ், ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் மைதானத்திலேயே கலங்கி, வேகவேகமாக ஓய்வறை சென்றனர். அதன்பின் ஓய்வறையில் சிறந்த ஃபீல்டருக்கான விருது பயிற்சியாளர் திலீப் வழங்கினார். வழக்கமாக மகிழ்ச்சியுடனும் கொண்டாட்டத்துடனும் இருந்த இந்திய ஓய்வறை, இன்று மயான அமைதியுடன் இருந்தது.

எந்தவொரு வீரரும் ஓய்வறையில் எழுந்து நிற்கவோ, கைகளை தட்டவோ கூட இல்லை. அந்த அளவிற்கு உலகக்கோப்பை தோல்வி இந்திய அணியை பாதித்தது. இந்த நிலையில் இந்திய அணி வீரர்களை பாராட்டும் வகையில் ஃபீல்டிங் பயிற்சியாளர் திலீப், இதற்கு மேல் இந்திய அணி வீரர்களிடம் இருந்து என்னால் எதுவும் கேட்க முடியாது. ஏனென்றால் களத்திற்குள் அனைத்தையும் முயற்சித்துள்ளோம். எனக்கு இது பெருமையளிக்கிறது.

இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதும் சிறந்த ஃபீல்டிங் செய்துள்ளோம். அதுமட்டுமல்லாமல் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்துள்ளோம். இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக ஃபீல்டிங் செய்ததோடு மட்டுமல்லாமல், அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் செயல்பட்ட வீரான விராட் கோலிக்கு சிறந்த ஃபீல்டருக்கான விருதை அளிக்கிறோம் என்று தெரிவித்தார்.

 

அப்போது அனைத்து வீரர்களும் கைகளை தட்டி உற்சாகப்படுத்த ஜடேஜா வந்து விராட் கோலிக்கு மெடலை அணிவித்தார். ஆனால் அப்போதும் கூட சோகமாக வந்து விராட் கோலி மெடலை அமைதியாக வாங்கி சென்றார். இந்த காணொளி ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை