India vs australia final
அந்த சமயம் 10 நிமிடங்கள் தாமதமானது போல் இருந்தது - கிளென் மேக்ஸ்வெல்!
இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக கோப்பை வென்றது. இதன் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 240 ரன்களுக்கு மடக்கி பிடித்த ஆஸ்திரேலியா உலகின் புதிய சாம்பியனாக வெற்றி வாகை சூடியது. அஹ்மதாபாத் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு ஆதரவாக உள்ள ஒரு லட்சம் ரசிகர்களை அமைதியாக வைத்திருப்போம் என்று ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் தெரிவித்திருந்தார்.
இறுதியில் சொன்னதை செய்து காட்டிய அவர் உலகக் கோப்பையை வென்ற 5வது ஆஸ்திரேலியா கேப்டன் என்ற மாபெரும் சாதனையும் படைத்தார். அதை விட இறுதிப் போட்டியை பார்ப்பதற்காக வந்த பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் தோல்வியை பார்த்து விட்டு கடைசியில் விருது வழங்கும் விழாவில் வெற்றிக் கோப்பையை ஆஸ்திரேலிய கேப்டன் பட் கம்மின்ஸிடம் கொடுத்தார். அத்துடன் கோப்பையை கொடுத்த பின் அங்கிருந்து வெளியேறிய அவர் மேடையின் கீழே நின்ற ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரிடமும் கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.