இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் பஞ்சாப் மொஹாலி பிந்த்ரா மைதானத்தில் இன்று இரவு தொடங்குகிறது. ஆஃப்கானிஸ்தான் அணியை தொடக்க வீரர் இப்ராஹிம் ஸத்ரன் வழி நடத்துகிறார். இந்திய டி20 அணிக்கு ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனாக திரும்பி இருக்கிறார். மேலும் இவருடன் சேர்த்து ரன் மெஷின் விராட் கோலியும் அழைக்கப்பட்டிருக்கிறார்.

Advertisement

இந்த அணியில் முக்கிய சேர்க்கையாக இஷான் கிஷான் நீக்கப்பட்டு சஞ்சு சாம்சங் விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மாவுடன் இணைந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பொதுவாக அருகில் எந்த வடிவ உலகக்கோப்பை தொடர் இருக்கிறதோ, அதற்கு எதிர் வடிவத்தில் தான் சஞ்சு சம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும். டி20 உலக கோப்பை தொடர் இருக்கின்ற பொழுது, தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் டி20 அணியில் தேர்வு செய்யாமல், ஒரு நாள் கிரிக்கெட் அணியில்தான் தேர்வு செய்திருந்தார்கள்.

Advertisement

ஆனால் ஒரு நாள் கிரிக்கெட்டில் கிடைத்த வாய்ப்பில் தென் ஆப்பிரிக்காவில் சதம் அடித்த சஞ்சு சாம்சனுக்கு டி20 இந்திய அணிகளும் இந்த முறை வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இஷான் கிஷான் மனச்சோர்வின் காரணமாக ஓய்வைக் கேட்டு வாங்கி சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விராட் கோலி பங்கேற்க மாட்டார் என்கின்ற தகவலை அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நேற்று உறுதிப்படுத்தியிருந்தார்.

மேலும் தொடக்க வீரர்களால ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் களம் இறங்குவது நிச்சயமாகிவிட்ட நிலையில், விராட் கோலி இல்லாத காரணத்தினால் மூன்றாவது இடத்தில் யார் பேட்டிங் செய்வார்கள் என்கின்ற கேள்வி இருந்து வருகிறது. தற்பொழுது மூன்றாவது இடத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் ஷுப்மன் கில் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் தகுதியானவர்களாக இருக்கிறார்கள்.

இவர்கள் இருவரையும் எடுத்துக் கொண்டால் மூன்றாவது இடத்தில் அதிக அனுபவம் பெற்றவராக டி20 கிரிக்கெட்டில் ஐபிஎல் தொடரிலிருந்து சஞ்சு சாம்சன் இருந்து வருகிறார். ஷுப்மன் கில் பொதுவாகவே சில காலமாக டி20 கிரிக்கெட்டில் சரியான செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று மூன்றாவது இடத்தில் கில்லுக்கு வாய்ப்பு தந்து, ஜெய்ஸ்வாலும் சிறப்பாக விளையாடினால், அடுத்து அது யாருக்கு வாய்ப்பு தருவது என்கின்ற சிக்கலை உருவாக்கும். எனவே நேரடியாக மூன்றாவது இடத்தில் அனுபவம் வாய்ந்த சஞ்சு சாம்சனை களம் இறக்குவது சரியான முடிவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News