இந்திய டெஸ்ட் அணிக்காக கேப்டன்சி ரேஸில் இருந்து விலகினார் ஜஸ்பிரித் பும்ரா!
எதிர்வரும் ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
மேலும் இத்தொடருக்கான இந்திய அணியும் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வாந்த ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில், அணியின் புதிய கேப்டன் யார் என்பது குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளன. கேப்டன்சிக்கான தேர்வில் ஷுப்மன் கில், கேஎல் ராகுல் மற்றும் ஜஸ்பிரித் புமரா ஆகியோர் இருப்பதாக கூறப்படுகிறது.
iஇந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு கேப்டன் அல்லது துணை கேப்டன் பதவி வழங்கப்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேற்கொண்டு அனைத்து போட்டிகளுக்கும் தயாராக இருக்கும் வீரருக்கு கேப்டன் பதவியை வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் பும்ரா டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணைக்கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டிந்தார். மேற்கொண்டு ரோஹித் சர்மா பங்கேற்காத போட்டிகளுக்கு பும்ரா கேப்டனாகவும் செயல்பட்டு வந்தார். ஆனால் அத்தொடாரின் கடைசி போட்டியின் போது கேப்டனாக செயல்பட்டு வந்த ஜஸ்பிரித் பும்ரா காயத்தை சந்தித்ததுடன் போட்டியில் இருந்தும் பாதியிலேயே வெளியேறினார்.
இந்நிலையில் தான் ஜஸ்பிரித் பும்ராவின் உடற்தகுதி மற்றும் பணிச்சுமையை கருத்தில் கொண்டு கேப்டன்சிக்கான தேர்வில் இருந்து அவரை விலக்குவது என்ற முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தற்போது ஜஸ்பிரித் பும்ரா தாமாக முன்வந்து கேப்டன் பதவியை ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது உடற்தகுதி மற்றும் பணிச்சுமையை மனதில் கொண்டு, ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடும் பொறுப்பையும் அவர் ஏற்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
Also Read: LIVE Cricket Score
முன்னதாக இதன் காரணமாக இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில்லும், இந்திய அணியின் துணைக்கேப்டனாக ரிஷப் பந்தும் நியமிக்கப்படுவார்கள் என்பது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. இதில் ஷுப்மன் கில் இந்திய அணிக்காக 32 டெஸ்ட் போட்டிகளிலும், ரிஷப் பந்த் இந்திய அணிக்காக 43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.