ஓய்வை அறிவித்தாலும் A+ ஒப்பந்தத்தில் நீடிக்கும் விராட் கோலி, ரோஹித் சர்மா!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக இங்கிலாந்து டெஸ்ட் தொடர் எதிவரும் நிலையில் இருவரும் ஓய்வை அறிவித்துள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அதேசமயம் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில், அவர்கள் இருவரும் இப்போட்டி பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்தில் A+ கிரேடில் இருந்து நீக்கப்படுவார்களா என்ற கேள்வி ரசிகர்களின் மனதில் எழுந்தது. ஆனால், இரண்டு மூத்த வீரர்களும் இன்னும் இந்திய அணியில் இருப்பதாகவும், அவர்களின் A+ தரம் அப்படியே இருக்கும் என்றும் பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது.
சமீபத்தில் பிசிசிஐ தங்களது புதுபிக்கப்பட்ட ஒப்பந்த பட்டியலை வெளியிட்டிருந்தது. இதில் இந்திய அணியின் அனுபவ வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் மட்டுமே ஏ+ ஒப்பந்தத்தில் தக்கவைக்கப்பட்டிருந்தனர். பொதுவாக மூன்று வடிவங்களிலும் விளையாடும் வீரர்கள் மட்டுமே இந்த தரத்தில் இடம் பெறுவார்கள், ஆனால் தற்சமயம் இந்த பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே மூன்று வடிவங்களிலும் விளையாடி வருகிறார்.
அதேசமயம் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார். ஏஎனெனில் கடந்த டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்த கையோடு ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தனர். இருப்பினும் அவர்களை பிசிசிஐ தங்களுடைய A+ ஒப்பந்த பட்டியலில் தக்கவைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுகுறித்து பேசிய பிசிசிஐ செயலாளர் டெப்ஜித் சைகியா, “ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், அவர்கள் இன்னும் இந்திய அணியில் உள்ளனர், மேலும் அவர்கள் கிரேடு A+ இன் அனைத்து வசதிகளையும் பெறுவார்கள்" என்பதை உறுதிப்படுத்திவுள்ளார். பிசிசிஐயின் இந்த முடிவிலிருந்து, இருவரும் மூன்று வடிவங்களிலும் விளையாடவில்லை என்றாலும், அவர்களின் அந்தஸ்து இன்னும் அப்படியே உள்ளது என்பது தெளிவாகிறது.
Also Read: LIVE Cricket Score
விராட் கோலி இந்திய அணிக்காக இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 46.85 சராசரியாக 9230 ரன்களை எடுத்துள்ளார். இதில் அவர் 30 சதங்களையும், 31 அரைசதங்களையும் அடித்துள்ளார். அதேசமயம் ரோஹித் சர்மா இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகாளில் விளையாடி 12 சதம், 18 அரைசதங்கள் என 4301 ரன்களையும் சேர்த்துள்ளனர். மேலும் இந்திய அணியின் கேப்டனாகவும் இவர்கள் பல சாதனைகளை படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.