தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 2010ஆம் ஆண்டு இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் அசத்திய காரணத்தால் தோனி தலைமையில் இந்தியாவுக்காகவும் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி ஹர்பஜன் சிங்கை பின்னுக்கு தள்ளி 3 வகையான கிரிக்கெட்டிலும் முதன்மை ஸ்பின்னராக உருவெடுத்தார்.

Advertisement

குறிப்பாக 2011 உலகக் கோப்பை வெற்றியில் தன்னுடைய பங்காற்றிய அவர், 2013 சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் கடைசி ஓவரை கச்சிதமாக வீசி இந்தியா கோப்பையை வெல்வதற்கு உதவியதை மறக்க முடியாது. அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டிலும் நிறைய விக்கெட்டுகளை எடுத்த அவர் தவிர்க்க முடியாத வீரராக அணியில் வலம் வந்தார்.

Advertisement

இருப்பினும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தோனி கேப்டன்ஷிப் பதவி விலகிய 2017க்குப்பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி அவருக்கு பெரிய ஆதரவை கொடுக்காமல் கழற்றி விட்டார். இதனால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் கேரியர் முடிந்ததாக கருதப்பட்டாலும் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் போராடி வந்த அஸ்வினுக்கு 2021, 2022 டி20 உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

அதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறிய அவர் 2023 உலகக் கோப்பையிலும் கடைசி நேரத்தில் அக்ஸர் படேல் காயமடைந்ததால் தேர்வானார். அந்த தொடரில் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடிய அவருக்கு போட்டியாக தற்போது நிறைய இளம் வீரர்கள் வந்து விட்டதால் இனிமேலும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்காது என்று உறுதியாக நம்பப்படுகிறது.

அதே போல ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராக இருந்தும் இன்னும் அவருக்கு வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் நிலையான வாய்ப்பு கிடைப்பதில்லை. இந்நிலையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் அடங்கிய வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாட அஸ்வின் தகுதியற்றவர் என்று யுவராஜ் சிங் அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “அஸ்வின் மகத்தான பவுலர். ஆனால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டின் இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கு அவர் தகுதியானவர் என்று நான் நினைக்கவில்லை. பந்து வீச்சில் அவர் நன்றாக செயல்படுவார். ஆனால் பேட்டிங்கில் அவரால் அணிக்கு என்ன செய்ய முடியும்? அல்லது ஃபீல்டராக என்ன உதவ முடியும்? டெஸ்ட் அணியில் அவர் இருக்க வேண்டும். ஆனால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் இந்திய அணியில் அவர் விளையாடுவதற்கு தகுதியானவர் என்று நான் கருதவில்லை” எனக் கூறினார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News