
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 வடிவிலான கிரிக்கட் தொடர்களிலும் விளையாடுகிறது. இதில் முதலில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பார்படாஸ் டொமினிக்கா மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய தரப்பில் இஷான் கிஷான் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் அறிமுக வீரர்களாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி இருக்கிறார்கள். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் இடதுகை பேட்ஸ்மேன் அலிக் ஆதனஸ் அறிமுகமாகி இருக்கிறார்.
இப்போட்டியில்டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய சுழற் பந்துவீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரிடம் சிக்கி 150 ரண்களுக்கு சுருண்டது. ரவிச்சந்திரன் அஸ்வின் ஐந்து விக்கட்டுகளும் ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கட்டுகளும் கைப்பற்றினார்கள்.
இதைத்தொடர்ந்து விளையாட வந்த இந்திய அணிக்கு துவக்கம் தர கேப்டன் ரோஹித் சர்மாவுடன் அறிமுக வீரர் இடதுகை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் வந்தார். வழக்கமாக மூன்று வடிவ இந்திய கிரிக்கெட்டிலும் தற்சமயம் துவக்க வீரராக விளையாடிக் கொண்டிருக்கும் சுப்மன் கில் இந்த முறை வரவில்லை. அவர் இந்த முறை புஜாரா விளையாடும் மூன்றாவது இடத்தில் களமிறங்குவார் என்று ஏற்கனவே இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியிருந்தார். மேலும் ஷுப்மன் கில் தாமே இதை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இடம் கேட்டதாகவும் தெரிவித்திருந்தார்.