
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் கடந்தாண்டு முதல் எஸ்ஏ20 என்றழைக்கப்படும் டி20 தொடரை நடத்தி வருகிறது. தற்போதுவரை இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள எஸ்ஏ20 லீக் தொடரானது மூன்றாவது சீசனுக்காக தற்போதில் இருந்தே தயாராகி வருகிறது. அந்தவகையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் ஏலத்திற்கு முன்னரே வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் ஆர்வம் காட்டின.
இந்நிலையில் எதிர்வரவுள்ள மூன்றாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடரில் சமீபத்தில் ஓய்வை அறிவித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக், பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். இதன்மூலம் இத்தொடரில் பங்கேற்கும் முதல் இந்திய வீரர் எனும் பெருமையையும் அவர் பெறவுள்ளார். இந்நிலையில், இத்தொடரில் இந்திய அணியைச் சர்ந்த சில முன்னாள் வீரர்களும் கவனம் ஈர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் யார் யார் என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
1.அம்பத்தி ராயுடு (Ambati Rayudu)