
3rd T20I: Matthew Wade Powers Australia To 90/5 In 8 Overs Per Side Game Against India (Image Source: Google)
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாக்பூரில் இன்று நடைபெற்றுவருகிறது. மழைக்காரணமாக ஆட்டம் 8 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடைபெறுவருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் - காமரூன் க்ரீன் இணை முதல் பந்திலிருந்தே அதிரடி காட்ட தொடங்கினர்.
இதில் க்ரீன் 5 ரன்களில் ரன் அவுட்டாகி ஆட்டமிழந்து வெளியேற, அவரைத் தொடர்ந்து வந்த கிளென் மேக்ஸ்வெல் ரன் ஏதுமின்றி முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.