
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (டிசம்பர் 14) தொடங்கிய நிலையில், இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் 13.2 ஓவர்களுடன் கைவிடப்பட்ட நிலையில், டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் சதத்தின் காரணமாக நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 405 ரன்களை குவித்தது. இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணியில் அலெக்ஸ் கேரி அரைசதம் கடந்ததுடன் 70 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
அதேசமயம் மறுபக்கம் மிட்செல் ஸ்டார்க் மற்றும் நாதன் லையன் ஆகியோர் ரன்களைச் சேர்க்க தவறிய நிலையில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களில் ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சாமாக டிராவிஸ் ஹெட் 152 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா ஆறு விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் இரண்டு விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.