Advertisement

4th Test, Day 2: சதத்தை தவறவிட்ட டெக்கெட், கிரௌலி; ரன் குவிப்பில் இங்கிலாந்து அணி!

இந்திய அணிக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 225 ரன்களைக் குவித்துள்ளது.

Advertisement
4th Test, Day 2: சதத்தை தவறவிட்ட டெக்கெட், கிரௌலி; ரன்  குவிப்பில் இங்கிலாந்து அணி!
4th Test, Day 2: சதத்தை தவறவிட்ட டெக்கெட், கிரௌலி; ரன் குவிப்பில் இங்கிலாந்து அணி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 24, 2025 • 11:09 PM

Manchester Test: இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் பென் டக்கெட் 94 ரன்னிலும், ஸாக் கிரௌலி 84 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து சதம்டிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். 

Bharathi Kannan
By Bharathi Kannan
July 24, 2025 • 11:09 PM

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேஎல் ராகுல் 46 ரன்னிலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58 ரன்னிலும், சாய் சுதர்ஷன் 61 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்களைச் சேர்த்திருந்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ரவீந்திர ஜடேஜா 19 ரன்களுடனும், ஷர்தூல் தாக்கூர் 19 ரன்களுடனும் தொடர்ந்தனர்.

இதில் ஜடேஜா 20 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடிய ஷர்துல் தாக்கூரும் 41 ரன்களில் ஆட்டமிழந்தர். அதன்பின் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 27 ரன்களுக்கும், அன்ஷுல் கம்போஜ் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து ரிஷப் பந்தும் 54 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்களும் ரன்களைச் சேர்க்க தவறினர். இதன் காரணமாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் மற்றும் ஸாக் கிரௌலி இணை அபாரமான தொடக்கத்தை வழங்கினர். இவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தங்களின் அரைசதங்களையும் பூர்த்தி செய்தனர். மேற்கொண்டு இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 166 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் ஜாக் கிரௌலி 13 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 84 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின் சதத்தை நெருங்கிய பென் டக்கெட்டும் 13 பவுண்டரிகளுடன் 94 ரன்களைச் சேர்த்த கையோடு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.

பின்னர் இணைந்த ஒல்லி போப் - ஜோ ரூட் நிதானமாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 225 ரன்களைக் குவித்துள்ளது. இதில் ஒல்லி போப் 20 ரன்களுடனும், ஜோ ரூட் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் அன்ஷுல் கம்போஜ் தலா ஒரு விக்கெட்டை கைப்பறியுள்ளனர். இதையடுத்து 133 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

Also Read: LIVE Cricket Score

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement