
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி கைல் மேயர்ஸ், நிக்கோலஸ் பூரன் ஆகியோரது அதிரடியான் ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 193 ரன்களைச் சேர்த்தது.
அதன்பி கடினமான இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு எதிர்பார்த்த துவக்கம் கிடைக்கவில்லை. பிரித்வி ஷா, மிச்சல் மார்ஸ் இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழந்தனர். கீப்பர் சர்ப்ராஸ் கான் தட்டு தடுமாறி நான்கு ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இவர்கள் மூவரின் விக்கெட்டையும் மார்க் வுட் தூக்கினார்.
நல்ல பார்மில் இருந்த ரைலி ரூஸோவ் 20 பந்துகளில் 30 ரன்கள், ரோமன் பவல் 1 ரன் அடித்து வெளியேற, 94 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி தடுமாறியது. மறுமுனையில் நின்று கொண்டு போராடி வந்த கேப்டன் டேவிட் வார்னர் 56 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்ததால், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே அடித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி.