
Aakash Chopra calls for grade A+ contract for Ravindra Jadeja (Image Source: Google)
இந்திய கிரிக்கெட்டில் ஒவ்வொரு வீரருக்குமான ஆண்டு ஊதிய விவரங்கள் பிசிசிஐ வெளியிட்டது. வழக்கம் போல ஏ +, ஏ, பி, சி என மொத்தம் 4 பிரிவுகளாக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ-ன் முதன்மை பிரிவான ஏ+ல் தான் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரி இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு ஊதியமாக ஆண்டிற்கு ரூ.7 கோடி வழங்கப்படுகிறது. கடந்தாண்டும் இவர்கள் மூன்று பேர் தான் இந்த பிரிவில் இடம்பெற்றிருந்தனர். அதில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தவில்லை.
ஆனால் கடந்தாண்டை போலவே இந்தாண்டும் ஜடேஜாவுக்கு ஏமாற்றம் தான். இந்திய அணிக்காக பல வெற்றிகளை குவித்த ஜடேஜா ஏன் ஏ+ பிரிவில் சேர்க்கப்படவில்லை என கடந்தாண்டே குற்றச்சாட்டு இருந்தது. இந்நிலையில் இந்தாண்டு அது துரோகம் என்ற பெயர் பெற்று விமர்சனங்கள் குவிகின்றன.