
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி ரசிகர்களிடையே பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 55 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அதன்பின் இந்திய அணி களமிறங்கிய நிலையில், 34.5 ஓவர்களில் 153 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.
இரண்டாவது இன்னிங்ஸில் 98 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில், முதல் நாள் ஆட்டத்திலேயே தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்ஸையும் தொடங்கியது. அதுமட்டுமல்லாமல் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 62 ரன்கள் சேர்த்துள்ளது. இதில் ஐடன் மார்க்ரம் 36 ரன்களுடனும், பெட்டிங்ஹாம் 7 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
ஒரே நாளில் 23 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் 134 ஆண்டுகளில் ஒரு டெஸ்ட் போட்டியில் ஒரே நாளில் 23 விக்கெட்டுகள் வீழ்த்தப்படுவது இதுவே முதல்முறை. ஒரு கட்டத்தில் ஆட்டம் ஒரே நாளில் முடிந்துவிடுமோ என்ற சிந்தனைகள் எல்லாம் வர்ணனையாளர்களுக்கு வந்து சென்றது.