
இந்திய கிரிக்கெட் அணி, வரவிருக்கும் இங்கிலாந்து ஒருநாள் தொடர் மற்றும் 2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நோக்கி தனது கவனத்தை செலுத்தி வருகிறது. அதிலும் இங்கிலாந்து ஒருநாள் தொடர் மற்றும் சம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், பிரபல வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணியைத் தேர்வு செய்து அறிவித்துள்ளார். அந்தவகையில் அவர் தனது அணியில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மான் கில்லை தொடக்க வீரர்களாகத் தேர்ந்தெடுத்துள்ளார். மூன்றாவது தொடக்க வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்ந்தெடுத்துள்ளார்.
மேற்கொண்டு விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரை மிடில் ஆர்டரில் தேர்வு செய்துள்ளார். இருப்பினும் அவரது இந்த அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. இதுதவிர்த்து ஆல் ரவுண்டருக்கான இடத்தில் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்ஸர் படேல் ஆகியோரைத் தேர்வு செய்துள்ளார்.