
Aakash Chopra Names Four Players Mumbai Indians Could Retain For IPL 2022 Mega Auction (Image Source: Google)
ஐபிஎல் 14வது சீசனின் 29 லீக் போட்டிகள் நடந்துள்ள நிலையில், எஞ்சிய போட்டிகள் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 15 வரை நடக்கவுள்ளது. இதைத்தொடர்ந்து நடைபெறும் ஐபிஎல் 15வது சீசனில் கூடுதலாக புதிதாக 2 அணிகள் சேர்க்கப்படவுள்ளன. அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
மெகா ஏலம் நடக்கவிருப்பதால், அனைத்து அணிகளும் 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்ற அனைத்து வீரர்களையும் கழட்டிவிட வேண்டும்.
அந்தவகையில், மும்பை இந்தியன்ஸ் அணி எந்த 4 வீரர்களை தக்கவைக்கும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.