Advertisement

ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸின் லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா!

எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.

Advertisement
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸின் லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா!
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸின் லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 17, 2025 • 08:45 PM

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இந்த வார இறுதியில் தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும், அந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
March 17, 2025 • 08:45 PM

இதில் ஐபிஎல் தொடரில் இதுவரை கோப்பையை கைப்பற்ற முடியாமல் தடுமாறி வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புதிய கேப்டன் அக்ஸர் படேல் மற்றும் புதிய தலைமை பயிற்சியாளர் ஹேமங்க் பதானியின் தலைமையில் தங்களுடைய முதல் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும் என்பதை முன்னாள் வீரர் அகாஷ் சோப்ரா கணித்துள்ளார். 

Trending

அதன்படி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஜேக் ஃபிரேசர் மெக்குர் மற்றும் கேஎல் ராகுலைத் தேர்வு செய்துள்ளார். இதில் கேஎல் ராகுல் சமீப காலமாகவே மிடில் ஆர்டரில் விளையாடி வரும் நிலையில் அவரை மீண்டும் தொடக்க வீரராக அணியில் சேர்த்துள்ளார். அதேசமயம் அணியின் துணைக்கேப்டனான ஃபாஃப் டூ பிளெசிஸ் தொடக்க வீரர் இடத்தில் இருக்கும் சமயத்திலும் ஆகாஷ் சோப்ரா அவருக்கு இந்த அணியில் வாய்ப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத்தொடர்ந்து மூன்றாம் வரிசையில் அபிஷேக் போரலிற்கு, நான்காம் இடத்தில் டிரிஸ்டன் ஸ்டப்ஸிற்கு வாய்ப்பு கொடுத்துள்ள ஆகாஷ் சோப்ரா 5ஆம் இடத்தில் ஹாரி புரூக்கை தேர்ந்தெடுத்துள்ளார். இருப்பினு நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து ஹாரி புரூக் விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ( குறிப்பு - ஒருவேளை ஹாரி புரூக் விலகுவதற்கு முன்னரும், டெல்லி அணியின் துணைக்கேப்டன் அறிவிக்கபடாததற்கு முன்னரே ஆகாஷ் சோப்ரா இந்த லெவனை தேர்ந்தெடித்திருக்கலாம்)

இதுதவிர்த்து அவர் கடந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அதிராடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்திய அஷுதோஷ் சர்மாவை 6ஆம் இடத்திலும், அணியின் கேப்டன் அக்ஸர் படேல் 7ஆம் இடத்திலும் தேர்ந்தெடுத்துள்ளார். மேற்கொண்டு அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை தேர்வு செய்த அவர், வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன், மிட்செல் ஸ்டார்க் மற்றும் முகேஷ் குமார் ஆகியோரையும் லெவனில் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேற்கொண்டு ஐபிஎல் தொடரின் இம்பேக் பிளேயர் விதியைப் பயன்படுத்து கருண் நாயர், மோஹித் சர்மா அல்லது தர்ஷன் நல்கண்டேவை தேர்ந்தெடுத்துள்ளார். இதில் கருண் நாயர் சமீபத்தில் நடந்து முடிந்த சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே கோப்பை, ரஞ்சி கோப்பை மற்றும் கர்நாடகாவின் மஹாராஜா கோப்பை உள்ளிட்ட தொடர்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ள நிலையிலும், அவருக்கு ஆகாஷ் சோப்ரா லெவனில் வாய்ப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் லெவன்: ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், கேஎல் ராகுல், அபிஷேக் போரல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஹாரி புரூக், அஷுதோஷ் சர்மா, அக்சர் படேல் (கேப்டன்), குல்தீப் யாதவ், நடராஜன், மிட்செல் ஸ்டார்க், முகேஷ் குமார்.

Also Read: Funding To Save Test Cricket

டெல்லி கேப்பிட்டல்ஸ்: அக்ஸர் படேல் (கேப்டன்), ஃபஃப் டு பிளெஸ்சிஸ் (துணைக்கேப்டன்),கேஎல் ராகுல், ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், கருண் நாயர், அபிஷேக் போரல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், குல்தீப் யாதவ், நடராஜன், மிட்செல் ஸ்டார்க், சமீர் ரிஸ்வி, அஷுதோஷ் சர்மா, மோஹித் ஷர்மா, முகேஷ் குமார், தர்ஷன் நல்கண்டே, விப்ராஜ் நிகம், துஷ்மந்த சமீரா, டோனோவன் ஃபெரீரா, அஜய் மண்டல், மன்வந்த் குமார், திரிபுரானா விஜய், மாதவ் திவாரி.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement