
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது 5 போட்டிகள் போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று ஹராரேவில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர். அதேசமயம் ஷுப்மன் கில் தலைமையில் களமிறங்கும் இளம் இந்திய அணியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்ற தனது தேர்வை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். அவர் தேர்வு செய்துள்ள அணியில் கேப்டன் ஷுப்மன் கில்லுடன், அனுபவ வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டை அணியில் சேர்த்துடன், அனுபவ வீரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் ரியான் பராக் ஆகியோருக்கும் தனது அணியில் வாய்ப்பு கொடுத்துள்ளார்.
மேற்கொண்டு அணி விக்கெட் கீப்பராக துருவ் ஜூரெலை தேர்வு செய்துள்ள அவர், ஃபினிஷராக ரிங்கு சிங்குவை தேர்வு செய்துள்ளர். மேற்கொண்டு அணியின் பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரையில் சுழற்பந்து வீச்சில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவி பிஷ்னோயும், வேகப்பந்து வீச்சாளர்களாக கலீல் அஹ்மத், முகேஷ் குமார் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார்.