Advertisement

ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!

நடப்பு ஐபிஎல் சீசனில் சஞ்சு சாம்சன் தலைமையில் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan March 16, 2024 • 14:44 PM
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா! (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் இந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதன்படி ஓவ்வொரு அணியும் தீவிரமுயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் நடப்பாண்டு ஐபிஎல் சீசனிலும் சஞ்சு சாம்சன் தலைமையில் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் கூட பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, நூழிலையில் தங்களது வாய்ப்பை இழந்தது. இதனால் நடப்பாண்டு ஐபிஎல் தொடரி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதுடன், இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடனும் ராஜஸ்தான் அணி இந்த சீசனை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் நடப்பு சீசனில் ராஜஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்ற சந்தேகங்கள் எழுந்து வருகின்றனர். 

Trending


இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். அந்தவகையில், அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரைத் தேர்வு செய்துள்ள ஆகாஷ் சோப்ரா அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு மூன்றாம் இடத்தை வழங்கியுள்ளர். அவரைத் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களை ரியான் பராக், துருவ் ஜுரெல், ஷிம்ரான் ஹெட்மையர் மற்றும் ரோவ்மன் பாவெலுக்கு வழங்கியுள்ளார். 

மேலும் அணியில் நான்கு வெளிநாட்டு வீரர்களை மட்டுமே விளையாடவைக்க முடியும் என்பதல் பந்துவீச்சாளர்களில் டிரெண்ட் போல்ட் மற்றும் நந்த்ரே பர்கர் ஆகியோரை சுழற்ச்சி முறையில் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளார். சுழற்பந்து வீச்சாளர்களில் ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹாலையும் தேர்வுசெய்துள்ளார். அவருகளுடன் ஆவாஷ் கானுக்கும் பிளேயிங் லெவனில் இடம் கொடுத்துள்ளார். மேலும் இதில் ஒருவீரரை இம்பேக்ட் பிளேயராக மாற்றி அந்த இடத்தில் குல்தீப் சென், நவ்தீப் சைனி, சந்தீப் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று கூறியுள்லார். 

இருப்பினும் ஆகாஷ் சோப்ராவின் இந்த பிளேயிங் லெவனில் பெரிதளவில் குழப்பம் உள்ளது ஏனெனில் அவர் ரோவ்மன் பாவெலுடன் சேர்த்து 7 பேட்டர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். அதெசமயம் பந்துவீச்சாளர்களில் டிரெண்ட் போல்ட், நந்த்ரே பர்க்கர் போன்ற வீரர்களில் ஒருவரை மட்டுமே விளையாட வைக்க முடியும் என்பது அணியின் பலவீனமாகவும் மாறும் என்று கருத்துகள் வெளிவருகின்றன.    

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி: சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஷிம்ரான் ஹெட்மையர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல், ரியான் பராக், டொனோவன் ஃபெரீரா, குணால் ரத்தோர், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் சென், நவ்தீப் சைனி, பிரசித் கிருஷ்ணா, சந்தீப் சர்மா, டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், ஆடம் ஸாம்பா, அவேஷ் கான், ரோவ்மேன் பாவெல், ஷுபம் துபே, டாம் கோஹ்லர்-காட்மோர், அபித் முஷ்டாக், நந்த்ரே பர்கர்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement