
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் இந்தாண்டு ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு தற்போதிலிருந்தே ரசிகர்கள் மத்தில் அதிகரித்து வருகிறது. மேலும் இத்தொடருக்கு தயாராகும் விதமாக ஒவ்வொரு அணியும் பிற நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர்களில் பங்கேற்று வருகிறது.
இந்நிலையில் வரவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் கணித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்த உலகக்கோப்பை தொடரில் வெற்றியாளரை கணிப்பது மிகவும் கடினம். ஏனெனில் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் அனைத்து அணிகளும் சிறப்பாக உள்ளன.
வெளிப்படையாக கூறவேண்டும் எனில் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை வெல்ல முயலும் என நம்புகிறேன. ஆனால் என்னை பொறுத்தவரையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மிக கடுமையாக போராடி கோப்பையை தன் வசமாக்குவதற்கு முயலும் என்பதில் சந்தேகமில்லை.