
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இத்தொடரின் முடிவில் பாகிஸ்தன் அணி மூன்று போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 3-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்து அசத்தியது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜோஹன்னஸ்பெர்கில் நடைபெற்றது. இப்போட்டியில் டஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. மேலும் மழை காரணமாக இப்போட்டி 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி, முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 308 ரன்களைக் குவித்தது.
இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சைம் அயூப் ஆடி சதமடித்து அசத்தியதுடன் 101 ரன்னில் ஆட்டமிழக்க, பாபர் அசாம், முகமது ரிஸ்வான் அரை சதம் கடந்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் காகிசோ ரபாடா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து, 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியில் ஹென்ரிச் கிளாசென் 81 ரன்களையும், கார்பின் போஷ் 40 ரன்களையும் சேர்த்தனர்.