அரைசதம் கடந்த ஆகாஷ் தீப்; பாராட்டிய தினேஷ் கார்த்திக்!
ஆகாஷ் தீப்பின் இந்த இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடியது உண்மையில் இந்தியாவை மிகவும் வலுவான நிலைக்கு கொண்டு சென்றதுள்ளது என முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கருண் நாயர் அரைசதம் கடந்த நிலையில் மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர்.
இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணியிலும் பென் டக்கெட் 43 ரன்களையும், ஸாக் கிரௌலி 64 ரன்களையும், ஹாரி புரூக் 53 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் இங்கிலாந்து அணி 247 ரன்களில் ஆல் ஆவுட்டான நிலையில், முதல் இன்னிங்ஸில் 23 ரன்கள் மட்டுமே முன்னிலையும் பெற்றது.
இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்திய நிலையில், கேஎல் ராகுல் 7 ரன்களுக்கும், சாய் சுதர்ஷன் 11 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். அதன்பின் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்த ஆகாஷ் தீப் சிறப்பான் ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அரைசதம் கடந்து அசத்தினார். இப்போட்டியில் அவர் 12 பவுண்டரிகளுடன் 66 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
இந்நிலையில் இப்போட்டியில் ஆகாஷ் தீப் அரைசதம் கடந்ததை முன்னால் வீரர் தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்திய அணி ஆகாஷ் தீபிடமிருந்து இதைவிட வேறு எதையும் கேட்டிருக்க முடியாது. ஏனெனில் அவர்கள் முதலில் நேற்றைய தினத்தை கடக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே அவரை களமிறக்கினர். ஆனால் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார்.
மேலும் அவருக்கு அதிர்ஷ்டமும் இருந்தது. அவரது பேட்டில் எட்ஜாகி சென்ற பந்துகள் பவுண்டரிகளுக்கு சென்றன. ஆனால் மொத்தத்தில், இது ஒரு அற்புதமான முயற்சி என்று நான் நினைக்கிறேன். உங்கள் டெயிலெண்டர்கள் எவ்வாறு விளையாடுகிறார்கள் என்பதைப் பொறுத்து, ஒரு அணியின் மனநிலையை நீங்கள் மதிப்பிடவும் புரிந்துகொள்ளவும் முடியும். மேலும் அவர் இந்த இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடியது உண்மையில் இந்தியாவை மிகவும் வலுவான நிலைக்கு கொண்டு சென்றதுள்ளது” என கூறியுள்ளார்.
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன், ஜோஷ் டோங்
Also Read: LIVE Cricket Score
இந்தியா பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், ஷுப்மன் கில் (கேப்டன்), கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்
Win Big, Make Your Cricket Tales Now