Advertisement

ஐபிஎல் 2022: ஏலத்தில் பங்கேற்கும் ஆர்ச்சர்!

வரவுள்ளை ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் தனது பெயரை பதிவுசெய்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan February 01, 2022 • 15:10 PM
Archer back in IPL auction, available to play from 2023 season
Archer back in IPL auction, available to play from 2023 season (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் கலந்துகொள்ள 1214 வீரர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். அணிகளின் விருப்பத்தைக் கேட்டுவிட்டு ஏலத்தில் இடம்பெறும் வீரர்களின் இறுதிப் பட்டியல் உருவாக்கப்படும். 

அதன்படி இறுதிப்பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டது. அதில் மொத்தம் 590 வீரர்கள் இறுதிசெய்யப்பட்டுள்ளனர். மேலும் இறுதிசெய்யப்பட்ட வீரர்கள் பட்டியலில் 370 இந்திய வீரர்களும், 220 வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்கின்றனர்.

Trending


இந்நிலையில் காயம் காரணமாக நடப்பாண்டு வீரர்கள் ஏலத்திலிருந்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகுவதாக அறிவித்திருந்தார். 

ஆனால் தற்போது அவர் தனது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு தனது பெயரைப் பதிவுசெய்துள்ளார். இருப்பினும் அவரால் இந்த சீசனில் விளையாட முடியாது என்றும், அடுத்தாண்டு (2023) சீசனில் நிச்சயம் பங்கேற்பார் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

 

முன்னதாக கடந்த ஐபிஎல் சீசனின் போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் முழங்கையில் ஏற்பட்டிருந்த காயத்தால் ஐபிஎல் தொடரில் முதல் பாதியில் பங்கேற்காமல் இருந்தார். அதன்பின் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் இரண்டாம் பாதி ஐபிஎல், டி20 உலகக்கோப்பை, ஆஷஸ் தொடர் என எதிலும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement