 
                                                    அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே திறந்தவெளியில் தலையில் வெட்டு காயத்துடன் ஆண் சடலம் ஒன்று கடந்த வியாழக்கிழமை கிடந்தது. இதனை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், உயிரிழந்த நபரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணையிலும் ஈடுபட்டனர்.
காவல்துறை விசாரணையில், இறந்து கிடந்தவர் பொய்யூர் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் என்பது தெரியவந்தது. மேலும் கடந்த வியாழக்கிழமை இரவு அவரது செல்போன் ஒரு அழைப்பு வந்ததாகவும் அதன் பின்னர் அவர் வீட்டை விட்டு வெளியே சென்றதும் விசாரணையில் தெரியவந்து இருக்கிறது.
அதன்பின் அந்த செல்போன் அழைப்பு யாருடையது என காவல்துறையின் மேற்கொண்ட விசாரணையில் அது விக்னேஷின் நண்பர் தர்மராஜ் என்பது தெரியவந்தது. அதன்பின் சந்தேகத்தின் அடிப்படையில் தர்மராஜை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பொதுமக்களை மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
 
                         
                         
                                                 
                         
                         
                         
                        